search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட"

    • முன்விரோதத்தில் மோதல்
    • ஆத்திரமடைந்த அஜய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அருண் வீட்டு ஜன்னலை அடித்து உடைத்துள்ளனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (வயது 46). அதே பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (25). அருண்குமார் கட்டிட தொழிலாளியாகவும், அஜய் டிரைவராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அருண் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜய், அவரிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

    இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அருண் வீட்டு ஜன்னலை அடித்து உடைத்துள்ளனர். அப்போது ஏற்பட்டமோதலில் அருண் மற்றும் அஜய் ஆகிய இருவரும் ஒருவரை யொருவர் கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்ட னர். இந்தமோதல் சம்பவம் தொடர்பாக தக்கலை போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் தனித் தனியாக புகார் கொடுக் கப்பட்டது. அருண் கொடுத்த புகாரின் பேரில் அஜய், ராஜ கோபாலன், சேகர் ஆகியோர் மீதும் அஜய்கொடுத்த புகாரின்பேரில் அருண் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்நிலையில் அஜய்யை கத்தியால் குத்திய அருணை போலீசார் கைது செய்தனர். அஜய் படுகா யங்களுடன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை ெபற்று வருகிறார்.

    • ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • வாலாஜா நகரத்தில் ரூ.2¾ கோடி மதிப்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வாலாஜாநகரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து அமைச்சர்சிவசங்கர் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திர மயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.88.40 லட்சம் மதிப்பில் 104 உழவு எந்திரங்களையும், ரூ.1.44 லட்சம் மதிப்பில் 4 களையெடுக்கும் எந்திரங்களையும் வழங்கினார். இதேபோல் அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திர மயமாக்கல் உப இயக்க திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.31 லட்சம் மதிப்பில்18 உழவு எந்திரங்களையும்,37 களையெடுக்கும் எந்திரங்களையும் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து குறித்த கண்காட்சியினை பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாதவர்களாக மாற்ற அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், அவர் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும் வழங்கினார்.

    • அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது
    • பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 3 மாத கால திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகமானது எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்த உள்ளது.

    பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இதேபோல் ஒரு வார கால பயிற்சி தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள், தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும். 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

    பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

    இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் அவர் தம் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்புடைய நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது மார்த்தாண்டம் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுக வேண்டும். இந்த பயிற்சி அடுத்த மாதம் 15 -ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
    • சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் குதிரால்விளையை சேர்ந்தவர் தாசையன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தாசையன் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு பகுதியில் மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது சிமெண்ட் கட்டையை தலையில் சுமந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தாசையனை மீட்டு குழித் துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி குடி போதையில் தகராறு செய்தார்.
    • இதுபற்றி கோகிலா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த மாதையன் மனைவி கோகிலா (வயது 33). இவர் வேலைக்கு சென்றுவிட்டு தாரமங்க லத்தில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அதே பேருந்தில் வந்த மேட்டு மாறனுர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (22) குடி போதையில் கோகி லாவிடம் தகராறு செய்தார். இதனால் பேருந்து நடத்து னர் சுரேசை மேட்டுமாரனுர் பகுதியில் கீழே இறக்கி விட்டு சென்றுள்ளார். இத னால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அடுத்த நாள் கோகி லாவிடம் சென்று தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி கோகிலா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    • நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்காக, வேலூரில் இருந்து கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • அதிவேகமாக வந்த கார், பெரியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி தண்ணீர் பந்தல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). கட்டிட மேஸ்திரி.

    இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்காக, வேலூரில் இருந்து கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    தாலுகா அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, நாமக்கலில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், பெரியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார், விபத்தில் பலியான பெரியசாமியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×