search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் போட்டி"

    • ஆஷஸ் கிரிக்கெட் அணி நி வீரர் சூர்யா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.
    • சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் பந்து வீச்சாளர் விஜய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

       கோத்தகிரி,

    கோத்தகிரி காந்தி மைதானத்தில் கோடநாடு கிரிக்கெட் கிளப் சார்பில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் கோத்தகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட 50 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் 3-வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோத்தகிரி ஆஷஸ் கிரிக்கெட் அணியும், ஈளாடா சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஷஸ் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19 ஓவர்கள் மட்டும் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் சூர்யா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களம் இறங்கிய சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணி வீரர்கள் மணிகண்டன் 36 ரன்கள், பாக்யராஜ் 30 ரன்கள் மற்றும் ராகுல் 28 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி காலிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. சிவகாமி எஸ்டேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் பந்து வீச்சாளர் விஜய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் வாழ்த்து பெற்றார்.
    • இவருக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் கடந்த டிசம்பரில் பாகிஸ்தானில் நடந்த சக்கர நாற்காலி ஆசிய கோப்பை கிரிக்கெட் 20- 20 போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டார்.

    இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி ஆசிய கோப்பை கைப்பற்றியது. மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட வினோத் பாபுவுக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு வந்தவுடன் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான உதவிகளை செய்ததற்காக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்களை காண்பித்து மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலி கிரிக்கெட் கேப்டன் வினோத்பாபு வாழ்த்து பெற்றார்.

    ×