search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி வீரர் அமைச்சரிடம் வாழ்த்து
    X

    அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மாற்றுத்திறனாளி வீரர் வினோத்பாபு வாழ்த்து பெற்றார்.

    மாற்றுத்திறனாளி வீரர் அமைச்சரிடம் வாழ்த்து

    • ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் வாழ்த்து பெற்றார்.
    • இவருக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் கடந்த டிசம்பரில் பாகிஸ்தானில் நடந்த சக்கர நாற்காலி ஆசிய கோப்பை கிரிக்கெட் 20- 20 போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டார்.

    இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி ஆசிய கோப்பை கைப்பற்றியது. மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட வினோத் பாபுவுக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு வந்தவுடன் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான உதவிகளை செய்ததற்காக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்களை காண்பித்து மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலி கிரிக்கெட் கேப்டன் வினோத்பாபு வாழ்த்து பெற்றார்.

    Next Story
    ×