search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலி பணியிடங்கள்"

    • ரேசன்கடை விற்பனையாளர்கள், கட்டுநர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்தார்.
    • இணையதளம் மூலம் மட்டும் அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகிறது

    மதுரை

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பா ட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலி பணியிடங்களாக உள்ள 148 விற்பனையாளர்கள் (சேல்ஸ்மேன்) மற்றும் 15 கட்டுநர்கள் (பேக்கர்) பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்ப தாரர்களிடம் இருந்து https://drbmadurai.net என்ற இணையதளம் மூலம் மட்டும் அடுத்த மாதம் (நவம்பர்)

    14-ந் தேதி மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பதாரர்க ளுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJDB என்ற யு-டியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்ப கட்டணங்கள் செலுத்த தேவையான செலான்கள் மேற்கண்ட இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் தங்கள் பகுதியில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள பொது இ-சேவை மையங்கள் மூலமாக மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://drbmadurai2022@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய தொலைபேசி எண் 0452-2531286 வாயிலாகவும், மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்படவுள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்படவுள்ளது.

    இது குறித்து தகவல் கேட்டு பல விண்ணப்பதாரர்கள் தொலைபேசி மூலம் பல்வேறு சந்தேகங்களை தெளிவுப்படுத்திட அழைப்பதால் கூட்டுறவுத்துறையின் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. TN COOP DEPT என்ற யூ-டியூப் சேனலில் உள்ள வீடியோ (http://www.youtube.com/watch?v=G6c5e2ELJDS) மூலம் விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர்கள், கட்டுநர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிந்து பயன்பெறலாம்.

    தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வரும் நவம்பர் மாதம் 14ம்தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • பணியிடங்களுக்கான தகுதியான நபா்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா்.
    • விவரங்களுக்கு இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

    திருப்பூா் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 61 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தகுதியான நபா்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கான நோ்காணல் வரும் அக்டோபா் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு, அறை எண்-240, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.இதுதொடா்பான விவரங்களுக்கு இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • இளநிலை உதவியாளர், உதவியாளர், ஆய்வாளர் உள்ளிட்ட 50 சதவீதத்திற்கும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் உடனே நிரப்ப வேண்டும்

    திருச்சி:

    தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி திருவானைக்காவலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வாசுகி தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் பால்ராஜ் வாசித்தார்.

    வரவு – செலவு கணக்கினை மாநில பொருளாளர் பாலமுருகன் சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் இந்துசமய அறிலையத்துறையில், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர், உதவியாளர், ஆய்வாளர் உள்ளிட்ட 50 சதவீதத்திற்கும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.

    மூத்த கண்காணிப்பாளர்களை தலைமை எழுத்தராக பணி நியமனம் செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் அறிவித்த சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான பணிகள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த அமைச்சுப்பணியிடங்களை புதிதாக ஏற்படுத்த வேண்டும்.

    அனைத்து இணைஆணையர் அலுவலங்களிலும் 3 இளநிலை உதவியாளர், 2 தட்டச்சர், உதவி ஆணையர் அலுவலகங்களில் 2 இளநிலை உதவியாளர், 1 தட்டச்சர் பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் 20 மண்டலங்களில் இருந்து மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில துணைத்தலைவர் அன்பழகன் வரவேற்றார். முடிவில் திருச்சி மண்டல தலைவர் தர்மராஜ் நன்றி கூறினார்.

    • தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.
    • எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூா் மாவட்டம், மேலஉசேன் நகரம் கிராமத்தில் ரூ.1.28 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு குடிநீா் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தம் விரைவில் கோரப்பட்டு, அதில் பங்கேற்கும் நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்படும். புதிய பேருந்துகளை விரைந்து அறிமுகப்படுத்த வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதால், அதற்கான நடைமுறைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் தனியாா்மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவா்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இந்த திட்டங்கள் அனைத்தும் தொடரும்.

    போக்குவரத்து கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5 ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீா்வு காணப்படும். சென்னையில் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.

    தனியாா் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணிகளை நிரப்புவதற்காக கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனவரி 2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை இதுநாள் வரை வழங்கவில்லை.
    • அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில் பழைய உயர்வையே இன்னும் வழங்காதது வருத்தமளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் தஞ்சை மாவட்ட செயலாளர் முருகக்குமார், மாவட்ட தலைவர் வெங்கடாசலம், பொருளாளர் அய்ய ம்பெருமாள் ஆகியோர் தமிழக முதல்-அமைச்ச ருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கு எப்போ தெல்லாம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கின்றதோ அப்போதெல்லாம் தமிழக அரசும் அதன் பணியாளர்களுக்கு வழங்கி வந்தது. தற்போது ஜனவரி 2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை இதுநாள் வரை வழங்கவில்லை. அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில் ஜனவரி 2022 வழங்க வேண்டிய அகவி லைப்படி உயர்வையே இன்னும் வழங்காதது வருத்தமளிக்கிறது.

    மேலும் ஆண்டுக்கு சரண் விடுப்பை 15 நாட்கள் ஒப்படைத்து காசாக்கும் முறை முட க்கப்பட்டு உள்ளது. இதேப்போல் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தவில்லை. உடனடியாக அதனை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டி.பி.எச்., திட்டத்தில் 180 டாக்டர்கள் பணிபுரிகின்றனர், 40 லேப் டெக்னீஷியன்கள் மட்டுமே உள்ளனர்.
    • காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு லேப் டெக்னீசியன் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொது சுகாதாரத்துறை சார்ந்த லேப் டெக்னீஷியன்களை உறுப்பினர்களாக கொண்ட, தமிழ்நாடு லேப் டெக்னீசியன் ஒன்றியக்குழுவின், கலந்தாய்வு கூட்டம் அவிநாசியில் நடந்தது.

    ஒன்றிய தலைவர் கார்த்திகேய வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் மோகன்ராஜ், மாநில மகளிரணி தலைவர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, துணைச் செயலாளர் கார்த்திகா, ஒருங்கிணைப்பாளர் மங்களாதேவி முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்ந்த கணக்கெடுப்பு படி மாவட்டத்தின் மக்கள் தொகை 26.80 லட்சம் பேர். மாவட்டத்தில் மொத்தம், 13 வட்டார மருத்துவமனைகள், அதற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 67 மையங்கள் உள்ளன.இதில் டி.பி.எச்., திட்டத்தில் 180 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். ஆனால் 40 லேப் டெக்னீஷியன்கள் மட்டுமே உள்ளனர்.

    பாதிக்கும் அதிகமாக காலிப்பணியிடம் இருப்பதால், பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.இதனால் வேலைப்பளு அதிகரிக்கிறது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    ×