search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
    X

    விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்படவுள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்படவுள்ளது.

    இது குறித்து தகவல் கேட்டு பல விண்ணப்பதாரர்கள் தொலைபேசி மூலம் பல்வேறு சந்தேகங்களை தெளிவுப்படுத்திட அழைப்பதால் கூட்டுறவுத்துறையின் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. TN COOP DEPT என்ற யூ-டியூப் சேனலில் உள்ள வீடியோ (http://www.youtube.com/watch?v=G6c5e2ELJDS) மூலம் விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர்கள், கட்டுநர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிந்து பயன்பெறலாம்.

    தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வரும் நவம்பர் மாதம் 14ம்தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×