search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் கோரிக்கை"

    • மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில், மின்வாரிய என்ஜினியர் அசோசியேசன் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், என்ஜினி யர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன், சி.ஐ.டி.யூ., மாவட்டத் தலைவர் துரை, பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிரிதரன், அண்ணா தொழிற் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜ், அம்பேத்கர் எம்ளாயிஸ் யூனியன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், சம்மேளனம் மாவட்டத் தலைவர் ரங்கநாதன், எம்ளாயிஸ் பெடரேசன் மாநில செயலாளர் டேவிட், பாட்டாளி தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல், ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரசேகர், என்ஜினியர்ஸ் யூனியன் மாவட்டத் தலைவர் மாணிக்கம், என்.எல்.ஓ., மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினார்.

    இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை தவிர மற்ற அனைத்து சங்கத்தினரும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில், மறுபகிர்வு, அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். மின்வாரிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வை உடனடி யாக வழங்க வேண்டும். காலிப்பணி யிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். மின்சார மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • இளநிலை உதவியாளர், உதவியாளர், ஆய்வாளர் உள்ளிட்ட 50 சதவீதத்திற்கும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் உடனே நிரப்ப வேண்டும்

    திருச்சி:

    தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி திருவானைக்காவலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வாசுகி தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் பால்ராஜ் வாசித்தார்.

    வரவு – செலவு கணக்கினை மாநில பொருளாளர் பாலமுருகன் சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் இந்துசமய அறிலையத்துறையில், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர், உதவியாளர், ஆய்வாளர் உள்ளிட்ட 50 சதவீதத்திற்கும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.

    மூத்த கண்காணிப்பாளர்களை தலைமை எழுத்தராக பணி நியமனம் செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் அறிவித்த சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான பணிகள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த அமைச்சுப்பணியிடங்களை புதிதாக ஏற்படுத்த வேண்டும்.

    அனைத்து இணைஆணையர் அலுவலங்களிலும் 3 இளநிலை உதவியாளர், 2 தட்டச்சர், உதவி ஆணையர் அலுவலகங்களில் 2 இளநிலை உதவியாளர், 1 தட்டச்சர் பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் 20 மண்டலங்களில் இருந்து மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில துணைத்தலைவர் அன்பழகன் வரவேற்றார். முடிவில் திருச்சி மண்டல தலைவர் தர்மராஜ் நன்றி கூறினார்.

    ×