search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தல்
    X

    தமிழக அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தல்

    • ஜனவரி 2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை இதுநாள் வரை வழங்கவில்லை.
    • அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில் பழைய உயர்வையே இன்னும் வழங்காதது வருத்தமளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் தஞ்சை மாவட்ட செயலாளர் முருகக்குமார், மாவட்ட தலைவர் வெங்கடாசலம், பொருளாளர் அய்ய ம்பெருமாள் ஆகியோர் தமிழக முதல்-அமைச்ச ருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கு எப்போ தெல்லாம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கின்றதோ அப்போதெல்லாம் தமிழக அரசும் அதன் பணியாளர்களுக்கு வழங்கி வந்தது. தற்போது ஜனவரி 2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை இதுநாள் வரை வழங்கவில்லை. அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில் ஜனவரி 2022 வழங்க வேண்டிய அகவி லைப்படி உயர்வையே இன்னும் வழங்காதது வருத்தமளிக்கிறது.

    மேலும் ஆண்டுக்கு சரண் விடுப்பை 15 நாட்கள் ஒப்படைத்து காசாக்கும் முறை முட க்கப்பட்டு உள்ளது. இதேப்போல் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தவில்லை. உடனடியாக அதனை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×