search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிப்பிடம்"

    குன்னூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஊட்டி,

    தற்போது கோடைசீசன் தொடங்கியுள்ளதால் ஊட்டி மற்றும் குன்னூருக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பஸ் நிலைய கட்டண கழிப்பிடம் திறக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    பஸ் நிலையத்தின் 4 புறமும் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து குன்னூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஊராட்சி மன்றம் சார்பாக நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
    • மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி பெருமா நல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் சார்பாக நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் ரூ.9.25 லட்சம் மதிப்பில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு ள்ளது. அதனை இன்று காலை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டி ற்கு அர்ப்ப ணித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வேல்குமார், எம்.சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி, பெருமா நல்லூர் கூட்டுறவு கடன் சொசைட்டி தலைவர் பொன்னுலிங்கம், கணக்க ம்பாளையம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் மேக்னம் பழனி சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஒன்றிய கழக பொருளாளர் சிவசாமி, பாசறை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் சேர்மன் தங்கராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராக்கியண்ணன், பெருமா நல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அய்யாசாமி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா பஜாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிப்பறை ஒன்று பராமரிப்பு இல்லாமல் கிடந்தது.
    • மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டது. கழிப்பறை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு தயாராக இருந்தது.

    ஊட்டி:

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் சமீபத்தில் ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே உடனடியாக அந்த கழிப்பிடங்களை மாநகராட்சி நிர்வாகம் மாற்றி அமைத்தது.

    இந்த சர்ச்சை ஓய்வதற்குள் இதேபோன்ற ஒரு சம்பவம் நீலகிரி மாவட்டத்திலும் தற்போது நிகழ்ந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா பஜாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிப்பறை ஒன்று பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வந்து செல்லும் இடம் என்பதால் அந்த பொது கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    அதன்பேரில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் கழிப்பறையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டது. கழிப்பறை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு தயாராக இருந்தது.

    பணி முடிந்ததால் அந்த பகுதியினர் ஆர்வத்துடன் கழிப்பறையை காண சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே அறையில் 2 பேர் அமரும் வகையில் கழிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது. கதவு எதுவும் இன்றி 2 கழிப்பிடத்துக்கு மத்தியில் சிறு தடுப்புச்சுவர் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதனை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. முறையான திட்டமிடுதல் இன்றி மத்திய அரசின் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர். ஒரே இடத்தில் 2 கழிப்பிடம் கட்டிய காண்டிராக்டர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    எதிர்ப்பு காரணமாக கழிப்பிடத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் நெல்லியாளம் நகராட்சி ஈடுபட்டு உள்ளது.

    • அரசு பள்ளி அருகில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தேத்திற்கு இடமான வகையில் ஆண் மற்றும் பெண் நின்று கொண்டிருந்தனர்.
    • போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரனாக பதிலளித்தால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் முத்துக்குமார்மற்றும் போலீசார் ரோந்து செ ன்றனர். அப்போது பாக்கி யம் நகர் அரசு பள்ளி அருகில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தே த்திற்கு இடமான வகையில் ஆண் மற்றும் பெண் நின்று கொண்டு இருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்த பொன்னையன் மனைவி பகவதி (வயது 48) , மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மதிவாணன் ( 32) என்பதும், 2 பேரும் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×