search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் 3 நாட்களாக திறக்கப்படாத பஸ் நிலைய கழிப்பிடம்
    X

    குன்னூரில் 3 நாட்களாக திறக்கப்படாத பஸ் நிலைய கழிப்பிடம்

    குன்னூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஊட்டி,

    தற்போது கோடைசீசன் தொடங்கியுள்ளதால் ஊட்டி மற்றும் குன்னூருக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பஸ் நிலைய கட்டண கழிப்பிடம் திறக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    பஸ் நிலையத்தின் 4 புறமும் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து குன்னூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×