search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அம்ரித்"

    • நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது

    ஊட்டி,

    நாட்டின் 74-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பின்னர் அவர் வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து காவல்துறை, என்.சி.சி., பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை பார்வையிட்டு, அவர்களின் மரியாதையை கலெக்டர் அம்ரித் ஏற்று கொண்டார்.

    விழாவையொட்டி பல்வேறு அரசு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது

    விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் செய்திருந்தார்.

    • சில கிராமங்களை தோ்ந்தெடுத்து மாதந்தோரும் மனுநீதி நாள் முகாம் நடத்துவதன் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான்.
    • 211 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    ஊட்டி,

    பந்தலூரை அடுத்துள்ள எருமாடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 191 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் சில கிராமங்களை தோ்ந்தெடுத்து மாதந்தோரும் மனுநீதி நாள் முகாம் நடத்துவதன் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான்.

    குறிப்பாக மக்களின் இருப்பிடத்திற்கே அரசு அதிகாரிகள் சென்று மனுக்களைப் பெற்றுக்கொள்வதோடு, தகுதிவாய்ந்த நபா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த முகாமில் 211 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும்.

    அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுகிறது.எனவே உடல்நலக் குறைவு உள்ளவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அனுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றாா்.

    தொடா்ந்து நடைபெற்ற முகாமில் முதியோா் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகைகளை 100 பயனாளிகள் பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

    மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.7.35 லட்சம் மதிப்பிலான கடனுதவி, தோட்டக்கலைத் துறை சாா்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.8.75 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய நலத் திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

    முகாமில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, மகளிா் திட்ட இயக்குநா் பாலகணேஷ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, சுகாதராப் பணிகளின் துணை இயக்குநா் பாலுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு உயர்நி லைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்க ல்வித்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத ்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கும் விதமாக ஒருங்கிணைந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உலக மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அவசியம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்றத்திறன் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்ப்பது குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்துப்பள்ளிகளிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் குறித்து உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டன.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் செய்கை மொழி தமிழ்ந்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. உங்களுக்காக தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் சிறந்த கல்வியினை சுற்று தருகின்றனர்.

    எனவே, மாணவ, மாணவிகளாகிய நீங்கள் கல்வி மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும், செய்கை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

    முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வண்ண ப்பென்சில்களையும், மாநில அளவில் நடைபெ ற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்தி றனாளி நல் அலுவலர் மலர்விழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை) பிரியா, நாகஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, உதவி திட்ட அலுவலர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அர்ஜூணன், பிரகாஷ், பள்ளித்தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் பியூலா, உதவி ஆசிரியர் (செய்கை மொழி) சாந்தி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது.
    • பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ஊட்டி

    எப்பநாடு ஊராட்சியில் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காந்தியடிகளின் உருவப்படத்துக்கு குத்துவிளக்கேற்றி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எப்பநாடு ஊராட்சிப் பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    இப்பகுதி மக்கள் மின்சார வசதி வேண்டியும், அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம், சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்துள்ளனா். இவை அனைத்தும் கள ஆய்வு செய்து சீா் செய்ய மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலா்களும், உள்ளாட்சித் துறை அலுவலா்களும் அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

    மேலும், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் குழந்தைகளின் நலன் கருதி இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்கிறது. அதேபோல, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சாா்பில் உயா் ரத்தஅழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு இரண்டு மாதத்துக்கான மருத்துவப் பெட்டகத்தை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் நம் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், நாம் இருக்கும் இடம் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டு, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற நிலையினை அடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, எப்பநாடு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கலெக்டர் அம்ரித் மரக்கன்றுகளை நடவு செய்து, பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை பாா்வையிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகத்தினையும் வழங்கினாா். அதனை தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், எப்பநாடு ஊராட்சித் தலைவா் சிவகுமாா், உதகை வட்டார மருத்துவ அலுவலா் மரு.முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
    • அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுகொண்டார்.பின்னர் பல்வேறு அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து பல்வேறு அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் அம்ரித் வழங்கினார். சுதந்திர தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. தூனேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று, ஊட்டி அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள் பங்கேற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடன நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் சிலம்பாட்டம், போதை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சுழல் கலைநிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட மக்களின் கலாசார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×