search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடிய மாணவர்கள்
    X

    சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடிய மாணவர்கள்

    • கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு உயர்நி லைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்க ல்வித்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத ்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கும் விதமாக ஒருங்கிணைந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உலக மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அவசியம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்றத்திறன் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்ப்பது குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்துப்பள்ளிகளிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் குறித்து உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டன.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் செய்கை மொழி தமிழ்ந்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. உங்களுக்காக தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் சிறந்த கல்வியினை சுற்று தருகின்றனர்.

    எனவே, மாணவ, மாணவிகளாகிய நீங்கள் கல்வி மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும், செய்கை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

    முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வண்ண ப்பென்சில்களையும், மாநில அளவில் நடைபெ ற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்தி றனாளி நல் அலுவலர் மலர்விழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை) பிரியா, நாகஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, உதவி திட்ட அலுவலர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அர்ஜூணன், பிரகாஷ், பள்ளித்தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் பியூலா, உதவி ஆசிரியர் (செய்கை மொழி) சாந்தி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×