என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அம்ரித்"

    • கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு உயர்நி லைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்க ல்வித்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத ்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கும் விதமாக ஒருங்கிணைந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உலக மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அவசியம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்றத்திறன் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்ப்பது குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்துப்பள்ளிகளிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் குறித்து உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டன.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் செய்கை மொழி தமிழ்ந்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. உங்களுக்காக தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் சிறந்த கல்வியினை சுற்று தருகின்றனர்.

    எனவே, மாணவ, மாணவிகளாகிய நீங்கள் கல்வி மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும், செய்கை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

    முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வண்ண ப்பென்சில்களையும், மாநில அளவில் நடைபெ ற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்தி றனாளி நல் அலுவலர் மலர்விழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை) பிரியா, நாகஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, உதவி திட்ட அலுவலர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அர்ஜூணன், பிரகாஷ், பள்ளித்தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் பியூலா, உதவி ஆசிரியர் (செய்கை மொழி) சாந்தி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சில கிராமங்களை தோ்ந்தெடுத்து மாதந்தோரும் மனுநீதி நாள் முகாம் நடத்துவதன் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான்.
    • 211 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    ஊட்டி,

    பந்தலூரை அடுத்துள்ள எருமாடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 191 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் சில கிராமங்களை தோ்ந்தெடுத்து மாதந்தோரும் மனுநீதி நாள் முகாம் நடத்துவதன் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான்.

    குறிப்பாக மக்களின் இருப்பிடத்திற்கே அரசு அதிகாரிகள் சென்று மனுக்களைப் பெற்றுக்கொள்வதோடு, தகுதிவாய்ந்த நபா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த முகாமில் 211 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும்.

    அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுகிறது.எனவே உடல்நலக் குறைவு உள்ளவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அனுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றாா்.

    தொடா்ந்து நடைபெற்ற முகாமில் முதியோா் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகைகளை 100 பயனாளிகள் பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

    மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.7.35 லட்சம் மதிப்பிலான கடனுதவி, தோட்டக்கலைத் துறை சாா்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.8.75 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய நலத் திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

    முகாமில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, மகளிா் திட்ட இயக்குநா் பாலகணேஷ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, சுகாதராப் பணிகளின் துணை இயக்குநா் பாலுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது

    ஊட்டி,

    நாட்டின் 74-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பின்னர் அவர் வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து காவல்துறை, என்.சி.சி., பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை பார்வையிட்டு, அவர்களின் மரியாதையை கலெக்டர் அம்ரித் ஏற்று கொண்டார்.

    விழாவையொட்டி பல்வேறு அரசு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது

    விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் செய்திருந்தார்.

    • யுஎன்சிஎஸ் 2013 முதல் கோத்தகிரியிலும், சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் 2018 முதல் கூடலூரில் செயல்படத் தொடங்கியது.
    • குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றினை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி ஜெம்பார்க் கூட்டரங்கில், (யு.என்.சி.எஸ்) மற்றும் (எஸ்.எஸ்.டி) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா காலத்தில் பணி புரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கலெக்டர் அம்ரித் நினைவு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    (யுஎன்சிஎஸ்) 2013 முதல் கோத்தகிரியிலும், சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் 2018 முதல் கூடலூரில் செயல்படத் தொடங்கியது. யுஎன்சிஎஸ் மற்றும் எஸ்எஸ்டி பெண்களுக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம், கால்நடைகள் மற்றும் சுகாதாரம், கிராமங்களின் நிலையான முழுமையான வளர்ச்சி ஆகிய துறைகளில் செயல்படுகின்றன.

    மேலும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், கொரோனா தொற்றுநோய் மக்களுக்கு பெரும் சவால்களையும் இருந்தது. அச்சமயத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர்கள் பொது மக்களுக்காக அதிக அளவில் பணியாற்றி உள்ளனர். அங்கன்வாடி மையங்கள் மற்றும் நியாய விலைக்கடைகளுக்கு, பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்பட்டுள்ளது.

    இது தவிர, 600-க்கும் மேற்பட்ட ஏழை பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளன. மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசால் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றினை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியின மக்களின் கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் (யு.என்.சி.எஸ்) மற்றும் (எஸ்.எஸ்.டி) மூலம் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து முன்னேற்ற பாதையில் என்ற புத்தகத்தினை வெளியிட்டு, பழங்குடியினர்களின் கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில், (யு.என்.சி.எஸ்) மற்றும் (எஸ்.எஸ்.டி) சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை தலைவர் ஸ்வரன் சிங் யு.என்.சி.எஸ் முன்னாள் தலைவர் மற்றும் டாக்டர். ஸ்ரீதரன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி, சீனிவாசன் அறக்கட்டளை கள இயக்குநர் சுந்தர்ராஜன், ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்க கள இயக்குநர் சிங்கராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள், மருத்துவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 20 ஆயிரம் ட்ரவுட் மீன் முட்டைகளை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோகர்நாத் அரசு ட்ரவுட் மீன் பண்ணையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது
    • 6ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக 6 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியினை, மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறிதாவது:-

    சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையின்படி, 20 ஆயிரம் எண்ணிக்கையில் ட்ரவுட் மீன் முட்டைகளை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோகர்நாத் அரசு ட்ரவுட் மீன் பண்ணையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அவலாஞ்சி அரசு டிரவுட் மீன் பண்யிைல் இருப்பு செய்திட அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 20ஆயிரம் எண்ணிக்கையில் ட்ரவுட் மீன் முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையில் இருப்பு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.

    இன்றைய தினம் 20ஆயிரம் டிரவுட் மீன் முட்டைகளில், தற்போது 14ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகளில் முதற்கட்டமாக அவலாஞ்சி அணையில் 6ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், 2-வது கட்டமாக மீதமுள்ள டிரவுட் மீன்குஞ்சுகள் லக்கடி, மேல்பவானி, தேவர்பேட்டா மற்றும் எமரால்டு நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள நீரோடைகளில் இருப்பு செய்யப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

    இந்நிகழ்வில், பவானிசாகர் (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் தில்லைராஜன், ஊட்டி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் (கூ.பொ) முனைவர் கதிரேசன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரத்துறையின் பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்டத்தின் சார்பில் குழந்தைகளுக்கான சிறப்பு இருதய பரிசோதனை முகாமினை கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்பு இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறிதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஊட்டத்தினை உறுதிசெய் என்ற ஒரு சிறந்த திட்டத்தினை நமது மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக அங்கன்வாடி மையங்களிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பள்ளி சிறார் குழந்தைகள் நலதிட்ட குழுக்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் நமது மாவட்டத்திலுள்ள பொது சுகாதாரதுறையின் பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்டத்தின் 8 குழுக்கள் மூலம் பிறந்த குழந்தைகளும், அங்கன்வாடி மையங்களிலும், பள்ளிகளிலும் பயில்கின்ற 19 வயது வரை உள்ள குழந்தைகளை பரி சோதனை செய்யப்பட்டதில் 237 குழந்தைகளுக்கு இருதய பிரச்சனைகளுக்கான அறிகு றிகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    இன்றைய தினம் சென்னை அப்போலோ மருத்துவமனை இருதய சிறப்பு நிபுணர் இக்குழந்தைகளுக்காக இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் எக்கோ பரிசோதனை மூலம் இருதய பிரச்சனைகள் உறுதி செய்யப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். எனவே, இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

    இம்முகாமில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, இருதய நோய் மருத்துவ நிபுணர்கள் முத்துக்குமரன், சரண்யா, குழந்தைகள் நல மருத்துவர்கள் உமாதேவி, நளினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 3-வது சுற்று இலவச கால்நடை கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டதில் கால்நடை பராமரிப்பு–த்துறை சார்பில் 3-வது சுற்று இலவச கால்நடை கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கால்நடை–களுக்கான அடையாள அட்டையும் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறும் போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 28,500 கால்நடைகளுக்கு வருகிற 21-ந் தேதி வரை 26 குழுக்கள் மூலம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களில் உள்ள அனைத்து கால்நடை–களுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

    இந்த வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் 125 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் பயன் பெற்ற அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து கலெக்டர் அம்ரித், கலெக்டர் அலுவலகத்தில், எஸ்.பி.டி மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் காய்கறிகளை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் நீலகிரியில் இருந்து கோவை, சேலம், ஈரோடு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    நீலகிரி மாவட்டம், ஊட்டி ரெயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பகவத் சிங், ஆவின் பொது மேளாலர் வெங்கடாச்சலம், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் சிவக்கிருஷ்ணன், ஊட்டி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பார்த்தசாரதி, கூடலூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் நீலவண்ணன், ஆவின் துணை பொது மேளாலர் சிவசங்கர், சைலேந்திரகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, துணை இயக்குநர் வேளாண் விற்பனை கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் முதுமலை புலிகள் காப்பகம் அருண், எஸ்.பி.டி மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்கள் (ஆர்.டி.ஒ டிரஸ்ட்) நிர்வாக இயக்குநர் பெருமாள், எஸ்.பி.டி நிறுவனத்தின் செயல் அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 வட்டாரங்களில் ஆறு மாத குழந்தைகள் 859 பேர் பிறப்பு எடை குறைவாக உள்ளனர்
    • 1,453 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கைத்த–ளாவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் ஆறு மாத குழந்தைகள் 859 பேர் பிறப்பு எடை குறைவாக உள்ளனர். மேலும் 6 மாதம் முதல் 6 வயது உள்ள குழந்தைகளில் 1,453 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்.

    இந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு கண்காணிப்பு அட்டைகள் வழங்கப்பட்டு மாதந்தோறும் எடை மற்றும் உயரம் எடுக்கப்பட்டு குழந்தைகள் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளது.

    மேலும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்ட–கத்தில் குழந்தை–களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ உணவு 56 நாட்களுக்கு தினசரி ஒரு சதவீதம் உண்ணும் வகையில் வழங்கப்படுகிறது. எனவே தாய்மார்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூசணி குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வேலகுமாரி, கோத்தகிரி தாசில்தார் காயத்ரி கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன், அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
    • பெண்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவியும் வழங்கி வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

    விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு சிறந்த சேவை மற்றும் பணியாற்றிய பெண்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    தமிழக அரசு மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவியும் வழங்கி வருகிறது.

    தமிழகத்தில் 8 லட்சத்து 23 ஆயிரத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44.840 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் 6 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. பல்வேறு தொழில் தொடங்க இதுவரை ரூ.300 கோடி அளவில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளி ருக்கு கடன் வாங்கியதில் சென்னைக்கு அடுத்து நீலகிரி 2-ம் இடத்தில் உள்ளது.

    காலை சிற்றுண்டி திட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டாரத்தில் 63 பள்ளியில் தொடங்கப்பட்டு 3,500 மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

    அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை தொ டருவதற்கு மாதந்தோறும் ரூ.1000-மும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நீலகிரியில் 383 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    பெண்களுக்கு சம உரிமை அளித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு உண்டு. சுதந்திரம் பெரும் முன்னரே இங்கு பெண்களுக்கு ஓட்டு ரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே பெண்கள் பல தடைகளையும் தகர்த்தெ றிந்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வன அலுவலர் கவுதம், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் என்ற மாயன், தோட்டக்க லைத்துறை துணை இயக்குனர் ஷிபிலா மேரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சிறுவர் மன்றத்தில் போலீசார் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்.

    • ஜெய்பா பாத்திமா என்ற மாணவி அதிகளவில் சத்து மாத்திரையை தின்றதால் உயிரிழந்தார்.
    • 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்தி ரையை தின்றதால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி பழைய தபால் நிலையம் பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்பவரின் மகள் ஜெய்பா பாத்திமா என்ற மாணவி அதிகளவில் சத்து மாத்திரையை தின்றதால் உயிரிழந்தார்.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, மாணவியின் குடும்பத்தி னருக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.3 லட்சத்திற்கான காசோ லையினை வழங்கினார்.

    பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6-ந் தேதி 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்தி ரையை தின்றதால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

    இவர்களில் 4 மாண விகளும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். இவர்களில் முகமது சலீம் என்பவரின் மகள் ஜெய்பா பாத்திமா, என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் மா ணவியின் குடும் பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண தொகையாக ரூ.3 இலட்சத்திற்கான காசோ லையினை வழங்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட நாசஜியா, ஆயிஷா மற்றும் செல்வி.குல்தூண் நிஷா ஆகி யோர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்ப டவுள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும் என கலெக்டர் அம்ரித் தெரிவித்தார். இதில், ஊட்டி நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், வட்டாட்சியர் ராஜசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இக்கிராமத்தில் 10 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது
    • 5 வருடங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்குந்தா ஊராட்சி, கிண்ணக்கொரை கிராமத்தில், உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு நடந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு கிராம உத்திரவிட்டுள்ளார். இதற்கு முன்பெல்லாம் ஒரு வருடத்தில் 4 கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். தற்போது ஆறு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதுபோன்ற கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிண்ணக்கொரை கிராமத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு குடிநீர் வசதியினை நிறைவேற்றும் வகையில் சிறப்புப்பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.5.45 கோடி மதிப்பில் சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு குடிநீர் குழாய்கள் அமைத்து, அதன் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மே மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இக்கிராமத்தில் ரூ. 13 லட்சம் மதிப்பில் 17 பணிகள் எடுக்கப்பட்டதில், 10 பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள 7 பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கிண்ணக்கொரை கிராமமானது ஒரு ஆர்கானிக் கிராமமாகவும், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கக்கூடிய ஒரு கிராமமாக இருந்துள்ளது.

    இதுவரை இல்லாத அளவில் வேளாண்மைத் துறைக்கு தமிழ்நாடு சட்டபேரவை 2023-2024 பட்ஜெட் கூட்டத்தொடரில் நீலகிரி மாவட்டத்திற்கு இயற்கை வேளாண்மையினை ஊக்குவிக்கும் விதமாக ஐந்து வருடங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆர்கானிக் திட்டத்தினை மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்தி இந்த கிண்ணக்கொரை கிராமத்தினை தமிழகத்திலேயே முன்னோடி கிராமமாக கொண்டு வர நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் சுகாதாரத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்து திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தினை வழங்கினார். உடன் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பாலகணேஷ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பாலுசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் என்ற மாதன், மேல்குந்தா ஊராட்சி தலைவர் பிரகாஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

    • 2022-23 ம் நிதியாண்டில் கூடுதலாக 1748 உறுப்பினர்களுக்கு ரூ. 12.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • 64 நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் 2 கூட்டுறவு நகர வங்கிகள், 38 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், 14 பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் 2 கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான நோக்கம் மாவட்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் மற்றும் நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், கூட்டுறவு நகர வங்கிகள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் மூலம் கீழ்கண்ட கடன்கள் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவு நகர வங்கியின் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ம் நிதியாண்டில் கூடுதலாக 1748 உறுப்பினர்களுக்கு ரூ. 12.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 583 உறுப்பினர்களுக்கு ரூ. 77.78 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் மூலம் நகைக்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 12,116 உறுப்பினர்களுக்கு ரூ. 62.57 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் 64 நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    02 அரசு மருந்தகம் மற்றும் 04 கூட்டுறவு மருந்தகத்தின் மூலம் 2022-23-ம் நிதியாண்டில் ரூ 3.84 கோடி விற்பனை செய்து இதுவரை ரூ 0.26 கோடி அளவிற்கு பொது மக்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் நீலகிரி கூட்டுறவு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 நிதியாண்டில் கூடுதலாக ரூ 0.66 கோடி அளவிற்கு அந்தியாவசிய மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    பிரதம கூட்டுறவு பண்டகசாலைகளின் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-2023 நிதியாண்டில் கூடுதலாக ரூ 0.18 கோடி அளவிற்கு அத்தியவாசிய மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட் டுள்ளது.

    நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மூலம் முந்தைய நிதி யாண்டை காட்டிலும் 2022-2023 நிதியாண்டில் கூடுதலாக ரூ 24.77 கோடி அளவிற்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.
    • சுய உதவிக்குழுவின் உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30,122 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முதல்வரால், ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வரின் காலை உணவு திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது இரண்டு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பள்ளி சமையலறை மையங்களை நிர்வகிப்பதுடன், குழந்தைகளுக்கு காலை உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக தகுதியுடைய சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இப்பணிக்கு தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மைய பொறுப்பாளர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில், நகர்ப்புற பகுதியில் வசிப்பிடமாக கொண்டு வசிப்பவராக இருக்கவேண்டும்.காலை உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் போதுமான அடிப்படை திறன் பெற்றிருக்க வேண்டும்.

    சுய உதவிக்குழுவின் உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்ப டும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் 5-ம் வகுப்பை நிறைவு செய்யும் பட்சத்திலோ அல்லது அப்பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலாகும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்பட்டு வேறு உறுப்பினர் இப்பணியில் அமர்த்தப்படுவார்.சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்சம் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மகளிர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய ஆன்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும்.

    இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள முதன்மை தேர்வு குழுவால் தற்காலிக பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இப்பணி தற்காலிகமான, விருப்பபணி மட்டுமே. அரசு நிர்ணயம் செய்யப்படும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதர படிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.

    இப்பணிக்கு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் முதன்மை குழு உறுப்பினர்கள் மீதோ, இதர மக்கள் பிரதிநிதிகள் மீதோ, புகார்கள் ஏதும் வரப்பெற்றால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    ×