search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்து மாத்திரை தின்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்-கலெக்டர் அம்ரித் வழங்கினார்
    X

    சத்து மாத்திரை தின்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்-கலெக்டர் அம்ரித் வழங்கினார்

    • ஜெய்பா பாத்திமா என்ற மாணவி அதிகளவில் சத்து மாத்திரையை தின்றதால் உயிரிழந்தார்.
    • 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்தி ரையை தின்றதால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி பழைய தபால் நிலையம் பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்பவரின் மகள் ஜெய்பா பாத்திமா என்ற மாணவி அதிகளவில் சத்து மாத்திரையை தின்றதால் உயிரிழந்தார்.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, மாணவியின் குடும்பத்தி னருக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.3 லட்சத்திற்கான காசோ லையினை வழங்கினார்.

    பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6-ந் தேதி 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்தி ரையை தின்றதால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

    இவர்களில் 4 மாண விகளும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். இவர்களில் முகமது சலீம் என்பவரின் மகள் ஜெய்பா பாத்திமா, என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் மா ணவியின் குடும் பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண தொகையாக ரூ.3 இலட்சத்திற்கான காசோ லையினை வழங்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட நாசஜியா, ஆயிஷா மற்றும் செல்வி.குல்தூண் நிஷா ஆகி யோர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்ப டவுள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும் என கலெக்டர் அம்ரித் தெரிவித்தார். இதில், ஊட்டி நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், வட்டாட்சியர் ராஜசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×