search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு வங்கிகள் மூலம் கூடுதல் கடன் உதவி-நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தகவல்
    X

    கூட்டுறவு வங்கிகள் மூலம் கூடுதல் கடன் உதவி-நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தகவல்

    • 2022-23 ம் நிதியாண்டில் கூடுதலாக 1748 உறுப்பினர்களுக்கு ரூ. 12.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • 64 நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் 2 கூட்டுறவு நகர வங்கிகள், 38 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், 14 பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் 2 கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான நோக்கம் மாவட்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் மற்றும் நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், கூட்டுறவு நகர வங்கிகள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் மூலம் கீழ்கண்ட கடன்கள் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவு நகர வங்கியின் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ம் நிதியாண்டில் கூடுதலாக 1748 உறுப்பினர்களுக்கு ரூ. 12.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 583 உறுப்பினர்களுக்கு ரூ. 77.78 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் மூலம் நகைக்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 12,116 உறுப்பினர்களுக்கு ரூ. 62.57 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் 64 நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    02 அரசு மருந்தகம் மற்றும் 04 கூட்டுறவு மருந்தகத்தின் மூலம் 2022-23-ம் நிதியாண்டில் ரூ 3.84 கோடி விற்பனை செய்து இதுவரை ரூ 0.26 கோடி அளவிற்கு பொது மக்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் நீலகிரி கூட்டுறவு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 நிதியாண்டில் கூடுதலாக ரூ 0.66 கோடி அளவிற்கு அந்தியாவசிய மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    பிரதம கூட்டுறவு பண்டகசாலைகளின் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-2023 நிதியாண்டில் கூடுதலாக ரூ 0.18 கோடி அளவிற்கு அத்தியவாசிய மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட் டுள்ளது.

    நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மூலம் முந்தைய நிதி யாண்டை காட்டிலும் 2022-2023 நிதியாண்டில் கூடுதலாக ரூ 24.77 கோடி அளவிற்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×