search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் பல தடைகளை தகர்த்தெறிந்து வாழ்வில் முன்னேற வேண்டும்-கலெக்டர் அம்ரித் பேச்சு
    X

    பெண்கள் பல தடைகளை தகர்த்தெறிந்து வாழ்வில் முன்னேற வேண்டும்-கலெக்டர் அம்ரித் பேச்சு

    • ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
    • பெண்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவியும் வழங்கி வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

    விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு சிறந்த சேவை மற்றும் பணியாற்றிய பெண்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    தமிழக அரசு மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவியும் வழங்கி வருகிறது.

    தமிழகத்தில் 8 லட்சத்து 23 ஆயிரத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44.840 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் 6 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. பல்வேறு தொழில் தொடங்க இதுவரை ரூ.300 கோடி அளவில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளி ருக்கு கடன் வாங்கியதில் சென்னைக்கு அடுத்து நீலகிரி 2-ம் இடத்தில் உள்ளது.

    காலை சிற்றுண்டி திட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டாரத்தில் 63 பள்ளியில் தொடங்கப்பட்டு 3,500 மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

    அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை தொ டருவதற்கு மாதந்தோறும் ரூ.1000-மும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நீலகிரியில் 383 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    பெண்களுக்கு சம உரிமை அளித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு உண்டு. சுதந்திரம் பெரும் முன்னரே இங்கு பெண்களுக்கு ஓட்டு ரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே பெண்கள் பல தடைகளையும் தகர்த்தெ றிந்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வன அலுவலர் கவுதம், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் என்ற மாயன், தோட்டக்க லைத்துறை துணை இயக்குனர் ஷிபிலா மேரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சிறுவர் மன்றத்தில் போலீசார் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்.

    Next Story
    ×