search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் குடிநீர் திட்ட பணிகள் மே மாதத்துக்குள் நிறைவு பெறும்-கலெக்டர் அம்ரித் தகவல்
    X

    ஊட்டியில் குடிநீர் திட்ட பணிகள் மே மாதத்துக்குள் நிறைவு பெறும்-கலெக்டர் அம்ரித் தகவல்

    • ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இக்கிராமத்தில் 10 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது
    • 5 வருடங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்குந்தா ஊராட்சி, கிண்ணக்கொரை கிராமத்தில், உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு நடந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு கிராம உத்திரவிட்டுள்ளார். இதற்கு முன்பெல்லாம் ஒரு வருடத்தில் 4 கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். தற்போது ஆறு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதுபோன்ற கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிண்ணக்கொரை கிராமத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு குடிநீர் வசதியினை நிறைவேற்றும் வகையில் சிறப்புப்பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.5.45 கோடி மதிப்பில் சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு குடிநீர் குழாய்கள் அமைத்து, அதன் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மே மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இக்கிராமத்தில் ரூ. 13 லட்சம் மதிப்பில் 17 பணிகள் எடுக்கப்பட்டதில், 10 பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள 7 பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கிண்ணக்கொரை கிராமமானது ஒரு ஆர்கானிக் கிராமமாகவும், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கக்கூடிய ஒரு கிராமமாக இருந்துள்ளது.

    இதுவரை இல்லாத அளவில் வேளாண்மைத் துறைக்கு தமிழ்நாடு சட்டபேரவை 2023-2024 பட்ஜெட் கூட்டத்தொடரில் நீலகிரி மாவட்டத்திற்கு இயற்கை வேளாண்மையினை ஊக்குவிக்கும் விதமாக ஐந்து வருடங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆர்கானிக் திட்டத்தினை மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்தி இந்த கிண்ணக்கொரை கிராமத்தினை தமிழகத்திலேயே முன்னோடி கிராமமாக கொண்டு வர நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் சுகாதாரத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்து திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தினை வழங்கினார். உடன் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பாலகணேஷ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பாலுசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் என்ற மாதன், மேல்குந்தா ஊராட்சி தலைவர் பிரகாஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

    Next Story
    ×