search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சபைக்கூட்டம்"

    • கலெக்டர் உத்தரவு
    • காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூ ட்டங்கள் தவறாமல் நடத்தப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செல வினம் குறித்து விவாதித்தல் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் உள்பட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்கா ணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளார்கள்.

    மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு தகவல்
    • அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, குடியரசு தினமான வரும் 26-ந் தேதியன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதமந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டம், மக்கள் நிலை ஆய்வு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்புத் திட்டம் மற்றும் இதரப் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.

    மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை ெதரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.







    • சிவகங்கை மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.
    • இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குடியரசு தினம் அன்று காலை 11 மணியளவில் உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதியன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த ஊராட்சியில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும்.

    கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தை ஒப்பிட்டு விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,பிரதமரின் குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதித்தல்.

    அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு,ஜல் ஜீவன் இயக்கம்,பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் போன்றவற்றை கிராம சபைக் கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் 1-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • கிராம சபைக் கூட்டத்தை நடத்திட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேனி

    தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவரால், நடத்தப்பட இருக்கிறது. 130 கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் ஆர்வத்து டனும் கலந்து கொள்ளும் வகையில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாளன்று கொரோனா வழிநெறிமுறை களை பின்பற்றி சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும், இடத்தினை கிருமி நாசினி கொண்டு, சுத்தம் செய்தும், கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்து ள்ளார்.

    • ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது.
    • பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ஊட்டி

    எப்பநாடு ஊராட்சியில் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காந்தியடிகளின் உருவப்படத்துக்கு குத்துவிளக்கேற்றி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எப்பநாடு ஊராட்சிப் பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    இப்பகுதி மக்கள் மின்சார வசதி வேண்டியும், அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம், சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்துள்ளனா். இவை அனைத்தும் கள ஆய்வு செய்து சீா் செய்ய மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலா்களும், உள்ளாட்சித் துறை அலுவலா்களும் அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

    மேலும், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் குழந்தைகளின் நலன் கருதி இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்கிறது. அதேபோல, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சாா்பில் உயா் ரத்தஅழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு இரண்டு மாதத்துக்கான மருத்துவப் பெட்டகத்தை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் நம் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், நாம் இருக்கும் இடம் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டு, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற நிலையினை அடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, எப்பநாடு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கலெக்டர் அம்ரித் மரக்கன்றுகளை நடவு செய்து, பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை பாா்வையிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகத்தினையும் வழங்கினாா். அதனை தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், எப்பநாடு ஊராட்சித் தலைவா் சிவகுமாா், உதகை வட்டார மருத்துவ அலுவலா் மரு.முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப்பொருட்கள் மற்றும் இதர கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும். இக்கிராம சபைக்கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற வுள்ள கிராம சபைக்கூ ட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்தி ட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் கலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண்வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக்கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று காலை 11 மணியளவில் கிராமசபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

    இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்கவு ள்ளனர்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற வுள்ள கிராம சபைக்கூ ட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்தி ட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×