என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபைக்கூட்டம்
    X

    கிராம சபைக்கூட்டம்

    • சிவகங்கை மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.
    • இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குடியரசு தினம் அன்று காலை 11 மணியளவில் உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதியன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த ஊராட்சியில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும்.

    கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தை ஒப்பிட்டு விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,பிரதமரின் குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதித்தல்.

    அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு,ஜல் ஜீவன் இயக்கம்,பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் போன்றவற்றை கிராம சபைக் கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×