search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினமான 15-ந்தேதி  95 ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம்  கலெக்டர் தகவல்
    X

    சுதந்திர தினமான 15-ந்தேதி 95 ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் கலெக்டர் தகவல்

    • இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற வுள்ள கிராம சபைக்கூ ட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்தி ட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் கலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண்வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக்கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று காலை 11 மணியளவில் கிராமசபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

    இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்கவு ள்ளனர்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற வுள்ள கிராம சபைக்கூ ட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்தி ட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×