search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amrit hoisted the flag"

    • ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
    • அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுகொண்டார்.பின்னர் பல்வேறு அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து பல்வேறு அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் அம்ரித் வழங்கினார். சுதந்திர தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. தூனேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று, ஊட்டி அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள் பங்கேற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடன நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் சிலம்பாட்டம், போதை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சுழல் கலைநிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட மக்களின் கலாசார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×