search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்தாய்வு"

    • இளநிலை பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளது.
    • விண்ணப்பித்த மாணவியர்களுக்கு வருகின்ற 19-ந் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24ஆம் கல்வியாண்டின் இளநிலை பாடப்பிரிவுகளான பி.பி.ஏ பி.ஏ வரலாறு, பிஎஸ்சி (கணிதம், விஷுவல் கம்யூனிகேஷன், புள்ளியல்) ஆகிய பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளது.

    மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவியர்கள் கல்லூரியில் நேரடியாக இன்று 16.6.2023 மற்றும் 17.6.2023 ஆகிய நாட்களில் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கு மாறும் மற்றும் பி.ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு) பி.பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி (கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், விஷுவல் கம்யூனிகேஷன்) ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இணைய வழியில் விண்ணப்பித்த மாணவியர்கள் வருகின்ற 19.6.2023 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு கல்லூரி முதல்வர் கீதா தெரிவித்துள்ளார்.

    • இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
    • தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான இளநிலைப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 14, 15 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    இக்கலந்தாய்வின் முதல்நாளான ஜூன் 14 ந் தேதி காலை 9.30 மணிக்கு பி.காம், பி.காம்.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம்.ஐபி, பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 11 மணிக்கும், வரலாறு, பொருளியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இரண்டாம் நாளான ஜூன் 15 ந் தேதி காலை 9.30 மணிக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும், காலை 11 மணிக்கு கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். விண்ணப்பித்தோரின் காத்திருப்போா் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன.
    • தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 2- ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 12 ம் தேதியன்று நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர். சோ.கி.கல்யாணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்த 864 இடங்களில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 286 காலி இடங்களுக்கு 2- ம் கட்ட கலந்தாய்வு 12 ம் தேதி நடைபெற உள்ளது.அறிவியல் பாடப்பிரிவு தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்களில், இயற்பியல்,கணிதம், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்குத் தகுதியுள்ள, பிளஸ்-2வில் கணிதம் பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

    கணினி அறிவியல்(சுழற்சி II),தாவரவியல் ,வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பின்தங்கிய வகுப்பில் (பிசி.,) ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.இவ்விடங்களுக்கான கலந்தாய்வில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த, பிளஸ்-2வில் – கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களைப் பயின்ற விண்ணப்பதாரர்கள் 12 -ந் தேதியன்று காலை 9 மணிக்கு கலந்து கொள்ளலாம்.

    கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பிபிஏ, பி.காம், பிகாம்(சிஏ), பி.காம்(இ.காம்) , அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கைக் கலந்தாய்வில்,பிளஸ்-2வில் தொழில்முறை பாடப்பிரிவில் பயின்ற, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு தரவரிசை 1208 முதல் 2651 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் காலை 11 மணிக்கு கலந்து கொள்ளலாம்.இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள பின்தங்கிய வகுப்பு (பி.சி.,) மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பு (எம்.பி.சி.) இடங்களுக்கு மட்டும், தமிழ் பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் 12.6.2023 அன்று பிற்பகல் 1மணிக்குக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு அனைத்து வகுப்பினை சேர்ந்த, ஆங்கில பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்களும் 2- ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு கல்லூரியின் www.gacudpt.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கப்பட்டது
    • வருகிற 12-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் அரசு கலை கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பித்த மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. இன்று தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், நாளை (சனிக்கிழமை) அறிவியல் பாடப்பிரிவுக்கும், வருகிற 12-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    முதற்கட்ட கலந்தாய்வுகளில் கலந்து கொண்டு இடம் கிடைக்காத மாணவ, மாணவிகளும், கலந்து கொள்ளாதவர்களும் இந்த 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் இணையதள விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்கள், 3 புகைப்படம், கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல் கட்ட கலந்தாய்வில் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்
    • மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. இதில் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். 2- ம் கட்ட கலந்தாய்வு வருகிற12-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-

    2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. இளநிலை அறிவியல் பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 81 மாணவர்கள் சேர்ந்தனர்.அதைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் 38 மாணவர்களும் ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் 24 மாணவர்களும் சேர்ந்தனர் .அந்த வகையில் இயற்பியல் பாடப்பிரிவில் 23 மாணவர்களும்,வேதியியல் பாடப்பிரிவில் 13 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும்,புள்ளியியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவுகளில் 11 மாணவர்களும்,அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் 8 மாணவர்களும்,கணினி அறிவியல் பாடப் பிரிவில் 20 மாணவர்களும்,தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் 38 மாணவர்களும், ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவில் 24 மாணவர்களும்ஆ க மொத்தம் 143 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.

    இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் இளநிலை கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் 382 மாணவர்களும்,இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் 196 மாணவர்களும் ஆக மொத்தம் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான 2- ம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 12 ந் தேதியன்று இனசுழற்சி மற்றும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள வருகை தரும் மாணவர்கள் 10 ,11, 12ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்றுச் சான்றிதழ் , ஆதார் அட்டை , சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்,தரவரிசை நகல் , கல்லூரி கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் .இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    • மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.
    • மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:- 2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.

    இதுவரை நடைபெற்ற கலை மற்றும் வணிகவியல் பிரிவில் மொத்தமாக 326 பேர் சேர்ந்து உள்ளனர்.தொடர்ந்து நேற்று இளநிலை அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதில் இயற்பியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும்,வேதியியல் பாடப்பிரிவில் 27 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், புள்ளியியல் பாடப்பிரிவில்2 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 14 மாணவர்களும், கணினிஅறிவியல் பாடப்பிரிவில் 47 மாணவர்களும்,தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் மற்றும் பிபிஏ பாடப்பிரிவில் தலா ஒருவரும் ஆக மொத்தம் 110 பேர் சேர்ந்து உள்ளனர்.இன்று அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

    பிற்பகல் 2 மணியளவில் தமிழ்இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தொடர்ந்து ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை , சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள் , பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம் , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் , தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு வரவேண்டும்.மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    • தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
    • விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. என்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 4ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். இந்த மாணவர்களுக்கான தரவரிசை முடிவு செய்யும் வகையில் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. ஒரே மாதிரியாக கட் ஆஃப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.

    ரேண்டமில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் வருகிற 20ம் தேதி தொடங்குகிறது.

    இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்க உள்ளது. சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 2 முதல் 5ம் தேதி வரையும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

    மாணவர்கள் ரேண்டம் எண் மற்றும் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 26-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
    • ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தொடங்க உள்ளது. ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 24-ந்தேதி வரை நடக்கிறது.

    என்ஜினீயரிங் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ந் தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. என்ஜினீயரிங் படிப்பில் சேர தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 20,306 பேர் அதிகம். விண்ணப்பங்களின் பதிவு நேற்று முடிவடைந்தாலும் விண்ணப்பங்களை பதிவேற்ற வருகிற 9-ந்தேதி வரை அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

    இந்நிலையில் என்ஜினீயரிங் மாணவர்களை தேர்வு செய்வதற்கான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒதுக்கப்பட உள்ளது. மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து தரவரிசை பட்டியல் வருகிற 26-ந் தேதி வெளியிடப்படும்.

    மேலும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.

    • பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுதொடங்கியது
    • நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அறிவியல் பாடப்பிரிவுகளில் 20 பேருக்கு இடம் கிடைத்தது. பெரம்பலூர் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கு முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு முதல் கட்டமாக கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இளங்கலை அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், வேதியியல், இயற்பியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் மற்றும் பி.டெக் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது.

    தலா 40 இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் 560 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டது. கலந்தாய்வில் கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளை தவிர மற்ற பாடப்பிரிவுகளில் மொத்தம் 20 பேருக்கு இடம் கிடைத்தது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    • 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன.
    • பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கீ.கல்யாணி கூறியதாவது:- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில் 2023- 2024 ம் கல்வியாண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு துறை என மொத்தம் 21 பேர் சேர்ந்தனர். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் பெற்ற தரவரிசைப்படி பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.

    இதில் பிபிஏ., பாடப்பிரிவில் 10 மாணவர்களும்,பி.காம் பாடப்பிரிவில் 52 மாணவர்களும்,பி.காம்(சிஏ) பாடப்பிரிவில் 59 மாணவர்களும்,இ.காமர்ஸ் பாடப்பிரிவில் 11மாணவர்களும்,பொருளியல் பாடப்பிரிவில் 6 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 2 மாணவர்களும் ஆக மொத்தம் 140 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர் .முதல் கட்ட கலந்தாய்வின் 3- ம் நாளான இன்று கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ்,ஆதார் அட்டை,சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 6 , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்,தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோருடன் வரவேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    • மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது.
    • ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தமிழரசி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:- 

    திருவெண்ணை நல்லூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது. இதில், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம். தொடர்ந்து, பொது கலந்தாய்வு ஜூன் 5-ந் தேதி கணினி அறிவியல் கணிதம் இயற்பியல் வேதியல் தாவரவியல் விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் இந்த பாடப்பிரிவலுக்கு கட்டணம் 2740 ஆகும்.

    ஜூன் 6-ந் தேதி வணிகவியல் காலை 9.30 மணி அளவில் தொடங்கும் இதற்கு கட்டணம் ரூ.2,720 ஆகும். ஜூன் 7-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்தாய்வு நடைபெறும். இதற்கு கட்டணம் 2.720 ரூபாய் ஆகும். ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் இவற்றின் உண்மைச் சான்றிதழ் உடன் 2 பிரதிகள், ஜெராக்ஸ் 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும்.

    சேர்க்கைக்கான கட்ட ணத்தை அன்றே அலுவ லகத்தில் செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பம் செய்த வர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், www.gasctvn.com என்ற இக்கல்லூரியின் இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் குறுஞ் செய்தி மற்றும் புலனம் (வாட்ஸ் அப்) வழியாக தகவல் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிய கல்லூரியை அணுகலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
    • 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவ,மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான பொது கலந்தாய்வில் முதல் கட்டமாக இன்று (1ம்தேதி) தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 2ம்தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 3ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 6ம்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    முதல் பொது கலந்தாய்வில் 2ம் கட்டமாக வரும 7ம்தேதி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 8ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 9ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ,மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்று சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும். 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது. அதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    ×