search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு பெட்டி"

    பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #PMModi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திமோடி கடந்த 9-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

    அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள்.

    2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

    அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

    ஆனால் அந்த பெட்டியில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இருந்ததாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.


    இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

    பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய கருப்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஒருவேளை அதில் பணம் இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் அதில் என்ன இருந்தது என்ற உண்மை வெளியே வர வேண்டும். இது சம்பந்தமாக தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தி அதன் விபரத்தை வெளியிட வேண்டும்.

    ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியை தனியார் இன்னோவா காரில் ஏற்றி இருக்கிறார்கள். உடனே அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த கார் சிறப்பு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பில் இடம் பெறவில்லை. இதுதான் பெரும் சந்தேகமாக உள்ளது.

    கர்நாடக மாநிலம் காங்கிரஸ் சார்பில் இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்து தேர்தல் கமி‌ஷன் தான் தனது கடமையை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார். #PMModi #Congress
    ×