search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தி போடும் திருவிழா"

    • கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
    • காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி கொம்பு செட்டி பாளையத்தில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்ம னை அழைப்பதற்காக, இந்தக்கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம். அதேபோல நேற்று அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.அய்யனார் கோவில் குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் கத்தியால் தங்கள்கைகளில் வெட்டிக் கொண்டேஅம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அப்போது இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகள், நெஞ்சு பகுதியில் வெட்டிக்கொண்டு அம்மனை அழைத்துச் சென்றனர். கத்தி போடும்போது ஏற்பட்ட வெட்டுக் காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

    • திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.

    கோவை,

    கோவை டவுன்ஹால் பகுதியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் கத்திபோடும் திருவிழா நடந்து வருகின்றனர்.

    கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று காலை இந்த கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.

    இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக வந்து, டவுன்ஹாலில் உள்ள சவுடேஸ்வரி கோவிலை வந்தடைந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜை, திருக்கல்யாணமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.

    ×