search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festival of throwing knives"

    • கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
    • காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி கொம்பு செட்டி பாளையத்தில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்ம னை அழைப்பதற்காக, இந்தக்கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம். அதேபோல நேற்று அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.அய்யனார் கோவில் குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் கத்தியால் தங்கள்கைகளில் வெட்டிக் கொண்டேஅம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அப்போது இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகள், நெஞ்சு பகுதியில் வெட்டிக்கொண்டு அம்மனை அழைத்துச் சென்றனர். கத்தி போடும்போது ஏற்பட்ட வெட்டுக் காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

    ×