search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் வழிபாடு"

    • தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • புரசைவாக்கம் வெள்ளாளல் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது.

    சென்னை:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். பெருமாளை வழிபடுபவர்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்குவார்கள்.

    அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு கூடுதல் விசேஷமாகும். அதிலும் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

    புரசைவாக்கம் வெள்ளாளல் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா... என கோஷம் எழுப்பி வழிபட்டனர். கோவில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கங்காதரன் செய்திருந்தார்.

    இதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசித்தனர்.

    • சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந் துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் ஆனி மாத 69-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்ம–னுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பையூரை சேர்ந்த மக்கள் கடும் வறட்சி, கொலை, கொள்ளை கார–ணமாக மிகவும் துன்புற்று இருந்தபோது இந்த அம் மனை வேண்டி வழிபட்ட–னர். பின்னர் முஸ்லீம் மன்னர்களின் படையெ–டுப்பின் போது அம்ம–னின் சிலையை வயல் வெளியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி இறக்கி மறைத்து வைத்தனர்.

    சில நூறு ஆண்டுகளுக் குப்பின் தூர்வாரும் போது சிலை மீட்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். மக்க–ளின் கஷ்டங்களை தீர்த்தும், பிள்ளை வரம் வேண்டுவோ–ரின் வேண்டுதலை நிறை–வேற்றியும், சிவகங்கையை காக்கும் காவல் தெய்வமா–கவும் இந்த அம்மன் அருள் பாலிக்கிறார்.

    ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி ஏழு நாட்கள் நடை–பெறும். விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூச்சொ–ரிதல் விழா அன்று வருடத் தில் ஒரு நாள் மட்டும் குழந் தையுடன் அம்மன் அருள் பாலிக்கிறார்.

    இவ்விழாவில் ஆயிரக்க–ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழி–பாடு செய்தனர். இன்று பூச்சொரிதல் விழாவில் மூலவர் காளியம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் பல்வேறு நறுமணத் திரவி–யங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற் றன.

    இதனைத்தொடர்ந்து அம்மன் குழந்தையை மடி–யில் வைத்தபடி சர்வ அலங்காரம் நடைபெற்று, பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாரா–தனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று காளியம்மனுக்கு பல வகை–யான பூக்களை சமர்ப்பித்து அர்ச்சனைகள் செய்து வழி–பாடு செய்தனர். பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    • சென்னை கல்லூரி மாணவர் கனவில் வந்து கூறிய இடத்தில் எல்லை பிடாரி அம்மன் சிலை இருந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
    • பரவசம் அடைந்த பக்தர்கள் சிலைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, பூமாலை அணிந்து வழிபட்டனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள வட சிறுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலன். இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது கனவில் மஞ்சள் நிற உடை அணிந்த பெண் வந்து வடசிறுவலூர் பச்சை அம்மன் கோவில் எதிரே உள்ள குளக்கரையில் முட்புதரில் ஒரு வேப்பமரத்தின் பின்புறம் எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை இருப்பதாகவும், அதை கிராம மக்கள் வழிபட வேண்டும் என கூறியுள்ளார்.

    இதுகுறித்து வேலன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி உள்ளார். அதன் படி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அங்கு இரு நாகங்களை குடையாக பிடித்த படி எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை இருந்தது. இதனால் பரவசம் அடைந்த பக்தர்கள் அந்த சிலைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, பூமாலை அணிந்து வழிபட்டனர்.

    • சென்னிமலை காமாட்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது.
    • பக்தர் ஒருவர் முதுகில் குத்தி பறவைக்காவடியில் வந்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை காமாட்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது.

    இதையொட்டி பொறை யன்காடு, களத்துக்காடு, மேலப்பாளையம், மதேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர்.

    மேலப்பாளையத்தில் உள்ள மாதேஸ்வரன் நகர் பகுதியிலிருந்து காமாட்சி யம்மன் கோவில் வரை பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர் ஒருவர் முதுகில் குத்தி பறவைக்காவடியில் வந்தார்.

    இந்த ஊர்வலம் மேலப்பாளையத்திலிருந்து தொடங்கி ஊத்துக்குளி ரோடு, குமரன் சதுக்கம், வடக்கு ராஜ வீதி, அரச்சலூர் ரோடு வழியாக கோவிலை அடைந்தது.

    காமாட்சி யம்மனுக்கு சிறப்பு அலங்கா ரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர்.  

    • இந்து முன்னணி வலியுறுத்தல்
    • அன்னதானம் வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலையில் சுயம்பு லிங்கங்கள் ,சப்தகன்னிகள்,முருகர் கோவில், பெரிய அளவில் சிவலிங்கம் ஆகியவை உள்ளன.

    இந்த மலை மீது சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள், பஜனை, கச்சேரி, பக்தர்களுக்கு அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக லாலாப்பேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சிகளை சேர்ந்த இருதரப்பினர் இடையே சில மாதங்களாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால், நேற்று சித்ரா பவுர்ணமி விழா உள்பட பஜனை, கச்சேரி, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த இருதரப்பினருக்கும் தடை விதித்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொ ள்ளவும் உதவி கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து காஞ்சனகிரி மலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. லாலாப்பேட்டை பகுதி பொதுமக்கள், பக்தர்கள், காஞ்சனகிரி மலைக்கு செல்லும் பாதையில் லாலாப்பேட்டை எல்லையில் பந்தல் அமைத்து நடராஜர் சுவாமி வைத்து அபிஷேகம், பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கினர்.

    இதனை கண்ட ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் பூஜைகள், வழிபாடு நடத்த கூடாது என பொதுமக்கள், பக்தர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கொட்டும் மழையில் பந்தல் அகற்றப்பட்டு , நடராஜர் சுவாமி சிலையும் எடுத்து செல்லப்பட்டது.

    முன்னதாக அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் காஞ்சனகிரி மலை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனு மதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் உரிய அனுமதி பெற்று வரக்கூறியதால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் இந்து முன்னணி அமைப்பினர் ராணிப்பேட்டை உதவி கலெக்டரிடம் , பக்தர்களை காஞ்சனகிரி மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவும் கொடுத்துள்ளனர்.

    • தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    பவானி:

    தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிகளவில் கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்தார். அதிகாலை முதலே ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், கரூர் என மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் நீண்ட சரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் என்றும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம், சுற்றுலா தலம் என பலர் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் இன்று தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அதிகாலை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் உட்பட பல்வேறு மூலவர்க ளுக்கு பல்வேறு திரவிய ங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு பக்தர்க ளுக்கு அருள் பாலித்தனர்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பவானி கூடுதுறைக்கு காலை முதலே பக்தர்கள் பலர் வந்து ஆற்றில் புனித நீராடி னர். மேலும் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர்.

    அதே போல் சென்னிமலை முருகன் கோவிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் காலை நேரத்தில் பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்தினர்.

    இதே போல் கொடுமுடிக்கு இன்று காலை கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி கரையில் புனித நீராடினர். இதையடுத்து மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    மேலும் அந்தியூர் பத்ர காளியம்மன், கோபிசெட்டி-பாளையம் சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், பச்சை மலை, பவள மலை முருகன், பவானி செல்லியாண்டி யம்மன், கருமாரியம்மன், அம்மாபேட்டை காவிரி கரையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்க நாதர் கோவில் உள்பட மாவட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதை தொடர்ந்துபக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அம்ம னுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து அம்மனை வழிபட்டனர்.

    இதே போல் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், கொங்காலம்மன், கோட்டை பத்ரகாளியம்மன் கருங்கல் பாளையம் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், சூரம்பட்டி மாரியம்மன், கோட்டை பெருமாள், ஈஸ்வரன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    இதே போல் ஈரோடு அடுத்த திணடல் வேலாயுதசாமி கோவிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வள்ளி- தெய்வானையுடன் அருள் பாலித்தார். இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திண்டல் மலைக்கு வந்து வழிபட்டனர்.

    மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் பழ வகைளை அம்மனுக்கு படைத்து பூஜை செய்து வழிபட்டனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆப்பிள், ஆரஞ்சு, மதுளை உள்பட பழ வகைகள் மற்றும் பணம், நகைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி பஞ்சாயத்துக்குட்பட்ட காங்கேயம்பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. 6 ஆயிரம் ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக பக்தர்களால் கருதப்படுகிறது.

    இக்கோவிலில் முருகன், அகஸ்தியர், காலபைரவர், துர்க்கை அம்மன், பிரம்மன், லட்சுமி, விநாயகர் மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட ஏராளமான சுவாமிகள் உள்ளன. ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தால் திருமண தடைகள், குழந்தை பேரின்மை, பிரம்மஹத்தி தோஷங்கள், பித்ரு சாபங்கள் இவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    இந்நிலையில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை முதல் நாள் என்பதால் கடந்த 2 நாட்களாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடைபெற்றன. சித்திரை முதல் நாளான இன்று ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் சாமியை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்.

    மேலும் குடும்பம் மற்றும் தொழில்களில் ஏற்படும் பிரச்சனைகள் விலகி செல்லும் என்ற ஐதீகம் பக்தர்களுக்கு இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் சாமியை தரிசனம் செய்து சென்றனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பாதுகாப்பிற்காக மொடக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
    • காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி கொம்பு செட்டி பாளையத்தில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்ம னை அழைப்பதற்காக, இந்தக்கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம். அதேபோல நேற்று அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.அய்யனார் கோவில் குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் கத்தியால் தங்கள்கைகளில் வெட்டிக் கொண்டேஅம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அப்போது இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகள், நெஞ்சு பகுதியில் வெட்டிக்கொண்டு அம்மனை அழைத்துச் சென்றனர். கத்தி போடும்போது ஏற்பட்ட வெட்டுக் காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

    • முனியாண்டி கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் வழிபாடு நடந்தது.
    • அன்னதானமாக அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் முனியாண்டிசுவாமி கோவிலில் தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை அன்று நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் 2-வது வெள்ளி கிழமை ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்த வர்களும் பிரியாணி திருவிழாவை நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வ லமாக வந்து பாலை சுவாமிக்கு அபிஷேகம்- பூஜை செய்து வழிபட்டனர். மாலையில் நடந்த விழாவில் கோவில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர், வெளியூர் மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட ப்பட்டது. பின்னர் 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார்செய்து சுவாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    தொடர்ந்து அண்டா க்களில் தயாராக வைக்கப் பட்டிருந்த பிரியாணி பக்தர்க ளுக்கு அன்னதா னமாக வழங்கப்பட்டது.இதில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராம மக்கள் விடிய, விடிய காத்திருந்து பாத்தி ரங்களில் பிரியாணியை வாங்கி சென்றனர்.

    • அனுமன் ஜெயந்தியையொட்டி வ.உ.சி.பூங்காவில் உள்ள மகா வீர ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
    • இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றனர்.

    ஈரோடு:

    அனுமன் ஜெயந்தியையொட்டி, ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள ஸ்ரீ மகா வீர ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

    முன்னதாக கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை அனுமனுக்கு கணபதி பூஜை மற்றும் அபிஷேகம் நடை பெற்றது. அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனக் காப்பு சாத்தப்பட்டது.

    அதிகாலை 5 மணி முதல் ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து இன்று மதியம் 1.30 மணிக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.

    பக்தர்களுக்கு ஆஞ்ச நேயர் வார வழிபாட்டு குழு சார்பில் பிரசாதமாக லட்டும், நாள் முழுவதும் அன்ன தானமும் வழங்க ப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கீதா, தக்கார் அருள்குமார் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று வழிபட்டனர்.

    இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வழிபடுவதற்கு தனி வரிசையும், வழிபட்டு வெளியே செல்வதற்கு தனி வரிசையும் போட ப்பட்டிருந்தது. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல கள்ளுக்கடை மேடு ஆஞ்ச நேயர் கோவி லிலும் அனுமன் ஜெயந்தியை யொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். அனுமன் ஜெயந்தியை யொட்டி ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆஞ்ச நேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதே போல் கோட்டை பகுதியில் உள்ள பெருமாள் கோவில், சத்தி ரோட்டில் உள்ள கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாநகர் பகுதியில் உள்ள கோவி ல்களில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கோபி செட்டிபாளையம் அமர்ந்த ராயர் கோவில் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவி லில் இன்று காலை பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பாரியூர் ஆதி நாராயண பெருமாள், மூலவாய்க்கால் ஸ்ரீதேவி, பூதேவி கரிவரத ராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு துளசி மாலை அலங் காரம் செய்யப்பட்டது.

    இதில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை வழி பட்டு சென்றனர். இதை யடுத்து பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

    மேலும் டி.என்.பாளை யம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி சஞ்சீவராயன் பெருமாள் கோவிலுள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து முழு சந்தனக்காப்பு பூசப்பட்டு, பால், தயிர், இளநீர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. 108 வடமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட மாலைகளும் அணிவிக்கபட்டது.

    இதையொட்டி ஆஞ்ச நேயரை தரிசிக்க அத்தாணி, பெருமுகை, கொண்டை யம்பாளையம், கள்ளி ப்பட்டி, கணக்கம்பாளையம், பங்களாப்புதூர், கோபி உள்ளிட்ட டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அந்தியூர் கோட்டை அழகுராஜ பெருமாள், பேட்டை பெருமாள் கோவி லில் உள்ள ஆஞ்ச நேயருக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வட மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்த னர்.

    சத்தியமங்கலம் பெரிய கோவிலில் உள்ள ஆஞ்ச நேயர், அம்மாபேட்டை காவிரிக்கரையில் அமைந்து உள்ள ஜெய ஆஞ்ச நேயர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி ஏராள மான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். அவர்களுக்கு பிரசாத மாக பொங்கல் மற்றும் சாதம் வழங்கப்பட்டது.

    மேலும் கவுந்தப்பாடி சந்தைபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவி லில் உள்ள ஆஞ்சநேயர் புளியம்பட்டி பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அல ங்காரம் செய்யப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை பால், தயிர், சந்தனம், விபூதி, உட்பட பல ேஹாம திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் செய்த னர்.

    அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது, இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், பக்த ர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்க ப்பட்டது.

    விழா எற்பாடுகளை சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் சிவக்குமார், பழனிவேலு ஆகியோர் தலைமையில் செய்திருந்தனர்.

    அதேபோல் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, பவானி, சித்தோடு, ஆப்பக் கூடல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்ச நேயர் ேகாவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனை கண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    திண்டுக்கல்:

    ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் மகாதீபாராதணை நடத்தப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

    நகரில் உள்ள ஒய்.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோவில், நேருஜிநகர் பன்னாரிஅம்மன் கோவில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோவில், வழித்துணை மாரியம்மன் கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன், பாதாளகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் மெங்கிள்ஸ் ரோட்டில் உள்ள பாலநாகம்மாள் கோவிலில் பால் ஊற்றி அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனை கண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    ×