search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees worship"

    • வேடந்தாங்கல் சுப்ரமணிய சாமி கோவிலில் குவிந்தனர்
    • பல்லக்கில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி, வள்ளி, தேவசேனா கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்ரமணியசுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    இதை தொடர்ந்து சுப்ரமணிய சாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்பு மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஒச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வேலூரில் பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு
    • ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

    வேலூர்:

    வேலூர் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். பழ வியாபாரி.

    இவர் தினமும் வேலூர் அடுத்த அப்புக்கல்லில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பப்பாளி பழங்களை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலை ரங்கநாதன் விற்பனைக்காக ஏராளமான பப்பாளி பழங்களை கொண்டு வந்தார்.

    இன்று காலை பப்பாளி பழங்களை தரம் பிரித்த போது அதில் இருந்த ஒரு பப்பாளி பழம் பெருமாள் உருவத்தில் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பப்பாளி பழத்துக்கு நாமம் இட்டு பூக்களை வைத்து பூஜைகளை செய்தனர்.

    பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சாமி அருகே வைத்தனர்.

    இந்த அதிசய பப்பாளி பழத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் வடிவில் பப்பாளி பழம் இருந்தது அப்பகுதி மக்களிடையே பரவசத்தை ஏற்பத்தியது.

    • வருகிற 16-ந்தேதி 108 பால்குடம் மற்றும் கூழ்வார்க்கும் திருவிழா
    • வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலை திரும ணிச் சேறைவுடையார் சிவன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவலிங்கம், திருமணி நாயகி தாயார், விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகர், அகத்தியர் ஆகிய மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் ஆனந்தன் ஐயர் தலைமையில் நடந்தது.

    அதைத் தொடர்ந்து சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமிகள் தலைமையில் பக்தி பாடல்கள் பாடியபடி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

    கோவில் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. இதில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் இருந்து பக் தர்கள் வந்து கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆண்டு பெருவிழாவை யொட்டி 108 பால்குடம் மற்றும் கூழ்வார்க்கும் திருவிழா நடக்கிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    • இந்து முன்னணி வலியுறுத்தல்
    • அன்னதானம் வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலையில் சுயம்பு லிங்கங்கள் ,சப்தகன்னிகள்,முருகர் கோவில், பெரிய அளவில் சிவலிங்கம் ஆகியவை உள்ளன.

    இந்த மலை மீது சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள், பஜனை, கச்சேரி, பக்தர்களுக்கு அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக லாலாப்பேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சிகளை சேர்ந்த இருதரப்பினர் இடையே சில மாதங்களாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால், நேற்று சித்ரா பவுர்ணமி விழா உள்பட பஜனை, கச்சேரி, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த இருதரப்பினருக்கும் தடை விதித்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொ ள்ளவும் உதவி கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து காஞ்சனகிரி மலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. லாலாப்பேட்டை பகுதி பொதுமக்கள், பக்தர்கள், காஞ்சனகிரி மலைக்கு செல்லும் பாதையில் லாலாப்பேட்டை எல்லையில் பந்தல் அமைத்து நடராஜர் சுவாமி வைத்து அபிஷேகம், பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கினர்.

    இதனை கண்ட ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் பூஜைகள், வழிபாடு நடத்த கூடாது என பொதுமக்கள், பக்தர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கொட்டும் மழையில் பந்தல் அகற்றப்பட்டு , நடராஜர் சுவாமி சிலையும் எடுத்து செல்லப்பட்டது.

    முன்னதாக அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் காஞ்சனகிரி மலை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனு மதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் உரிய அனுமதி பெற்று வரக்கூறியதால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் இந்து முன்னணி அமைப்பினர் ராணிப்பேட்டை உதவி கலெக்டரிடம் , பக்தர்களை காஞ்சனகிரி மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவும் கொடுத்துள்ளனர்.

    • முனியாண்டி கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் வழிபாடு நடந்தது.
    • அன்னதானமாக அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் முனியாண்டிசுவாமி கோவிலில் தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை அன்று நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் 2-வது வெள்ளி கிழமை ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்த வர்களும் பிரியாணி திருவிழாவை நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வ லமாக வந்து பாலை சுவாமிக்கு அபிஷேகம்- பூஜை செய்து வழிபட்டனர். மாலையில் நடந்த விழாவில் கோவில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர், வெளியூர் மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட ப்பட்டது. பின்னர் 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார்செய்து சுவாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    தொடர்ந்து அண்டா க்களில் தயாராக வைக்கப் பட்டிருந்த பிரியாணி பக்தர்க ளுக்கு அன்னதா னமாக வழங்கப்பட்டது.இதில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராம மக்கள் விடிய, விடிய காத்திருந்து பாத்தி ரங்களில் பிரியாணியை வாங்கி சென்றனர்.

    • திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நடந்தது
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 5.45 மணியில் இருந்து ½ மணி நேரம் திடீரென மழை பெய்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலை வரை பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    அதுமட்டுமின்றி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை பவுர்ணமி உள்ளதால் இன்றும் பக்தர்கள் 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்.

    • நவத்திருப்பதி பெருமாள் கோவில்கள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
    • 4-வது சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    தென்திருப்பேரை:

    புரட்டாசி மாதம் சனிக் கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வா திருநகரி, தென்திருப்பேரை சுற்று வட்டாரப்பகுதியை சுற்றி நவத்திருப்பதி பெருமாள் கோவில்கள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

    இந்த கோவில்கள் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். அதன்படி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசன பெருமாள், திருப்புளியங்குடி காய்சினி வேந்த பெருமாள், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்த லோசனர், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருபேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய 9 நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பல்வேறு வாகனங்களில் வருகை தந்த பக்தர்கள் குடும்பத்துடன் நெய் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக நெல்லையில் இருந்து நவதிருப்பதி பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொது தரிசனம் மற்றும் ரூ.10 என சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    • ஆடி பவுர்ணமியையொட்டி வழிபாடு
    • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி மாத பவுர்ணமி இன்று காலை 10. 20 மணிக்கு தொடங்கி நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை உள்ளது. இதையொட்டி இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியையொட்டி வேலூர், சென்னை, பெங்களூர், சேலம், விழுப்புரம், காஞ்சீபுரம் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 44 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்ததால் கோவில் நடை திறந்தபோது பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் சபரிமலை செல்ல தயங்கினர்.

    இந்த நிலையில் சபரிமலையில் நடந்த போராட்டங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டது. போலீசாரின் கெடுபிடிகளும் குறைந்தன. மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஐகோர்ட்டு நியமித்த குழு ஆய்வு செய்து திருப்தி தெரிவித்தது.

    இதையடுத்து சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிய தொடங்கினர். நடைதிறந்து 2 வாரங்களுக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.

    நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 44 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக நடை திறந்த பின்பு நேற்றுதான் மிக அதிகளவில் பக்தர்கள் வந்துள்ளனர். இதனை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சன்னிதானத்தில் 18-ம் படி ஏற 3 மணி நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. #Sabarimala



    சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமாகிறது. #Tirupatitemple
    திருமலை:

    சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    நேற்று காலையில் இருந்து மாலை வரை 98,230 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.1 கோடியே 66 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. 52 ஆயிரம் பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    இன்று காலையிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி, நாராயணகிரி பூங்கா வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசன வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமாகிறது.

    தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். திருமலையில் உள்ள பல இடங்களிலும் உணவுப் பொட்டலங்களை ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் வழங்கி வருகிறார்கள்.  #Tirupatitemple
     


    ×