search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சனகிரி மலை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்
    X

    காஞ்சனகிரி மலை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்

    • இந்து முன்னணி வலியுறுத்தல்
    • அன்னதானம் வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலையில் சுயம்பு லிங்கங்கள் ,சப்தகன்னிகள்,முருகர் கோவில், பெரிய அளவில் சிவலிங்கம் ஆகியவை உள்ளன.

    இந்த மலை மீது சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள், பஜனை, கச்சேரி, பக்தர்களுக்கு அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக லாலாப்பேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சிகளை சேர்ந்த இருதரப்பினர் இடையே சில மாதங்களாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால், நேற்று சித்ரா பவுர்ணமி விழா உள்பட பஜனை, கச்சேரி, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த இருதரப்பினருக்கும் தடை விதித்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொ ள்ளவும் உதவி கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து காஞ்சனகிரி மலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. லாலாப்பேட்டை பகுதி பொதுமக்கள், பக்தர்கள், காஞ்சனகிரி மலைக்கு செல்லும் பாதையில் லாலாப்பேட்டை எல்லையில் பந்தல் அமைத்து நடராஜர் சுவாமி வைத்து அபிஷேகம், பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கினர்.

    இதனை கண்ட ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் பூஜைகள், வழிபாடு நடத்த கூடாது என பொதுமக்கள், பக்தர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கொட்டும் மழையில் பந்தல் அகற்றப்பட்டு , நடராஜர் சுவாமி சிலையும் எடுத்து செல்லப்பட்டது.

    முன்னதாக அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் காஞ்சனகிரி மலை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனு மதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் உரிய அனுமதி பெற்று வரக்கூறியதால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் இந்து முன்னணி அமைப்பினர் ராணிப்பேட்டை உதவி கலெக்டரிடம் , பக்தர்களை காஞ்சனகிரி மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவும் கொடுத்துள்ளனர்.

    Next Story
    ×