என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muniyandi Temple"

    • முனியாண்டி கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் வழிபாடு நடந்தது.
    • அன்னதானமாக அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் முனியாண்டிசுவாமி கோவிலில் தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை அன்று நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் 2-வது வெள்ளி கிழமை ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்த வர்களும் பிரியாணி திருவிழாவை நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வ லமாக வந்து பாலை சுவாமிக்கு அபிஷேகம்- பூஜை செய்து வழிபட்டனர். மாலையில் நடந்த விழாவில் கோவில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர், வெளியூர் மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட ப்பட்டது. பின்னர் 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார்செய்து சுவாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    தொடர்ந்து அண்டா க்களில் தயாராக வைக்கப் பட்டிருந்த பிரியாணி பக்தர்க ளுக்கு அன்னதா னமாக வழங்கப்பட்டது.இதில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராம மக்கள் விடிய, விடிய காத்திருந்து பாத்தி ரங்களில் பிரியாணியை வாங்கி சென்றனர்.

    • திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் திருவிழா நடந்தது.
    • மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி கடைசி வெள்ளிக்கிழமை அன்று அன்னதான பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையெட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ணன் திரளி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜாராம் ஊர் நாட்டாமை அழகர்சாமி விழா கமிட்டி நிர்வாகி பழனி முருகன் மற்றும் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் மகளிர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
    • விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளில் ஓட்டல்கள் நடத்தும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக விளங்கி வருகிறது.

    வருடந்தோறும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து விமரிசையாக திருவிழா நடத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    89-வது ஆண்டாக நடை பெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்து அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.

    இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

    இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • அசைவ உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
    • மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று இந்த கோவிலில் பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 62-வது பொங்கல் திருவிழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேளரா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 250 பெண்கள் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து முனியாண்டி சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோபாலபுரம், செங்கபடை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

    இதற்கிடையே மாலை 5 மணியளவில் கோபாலபுரம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது. கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் இதில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவில் நோக்கி கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.

    பல பெண்கள் சாமியாடியபடியே ஊர்வலகத்தில் பங்கேற்றனர். மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு பக்தர்கள் கொண்டு வந்திருந்த தேங்காயை உடைத்து முனியாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • பிரியாணி திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வார்கள்.
    • பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் நடத்தி வரும் பிரியாணி திருவிழா அந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். அதில் ஒரு சமுதாயத்தினர் சார்பில் 90-வது ஆண்டாக நடைபெறும் இந்த பிரியாணி திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வார்கள்.

    இந்நிலையில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலை மாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    அங்கு சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்டபட ஏராளமானோர் திரண்டனர்.

    விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார் செய்து இன்று அதிகாலை கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி சுடச்சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.


    இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய, விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஓட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும்.

    பிரியாணி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூறுகையில், முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியியிடப்பட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேத மில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.

    இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும்.

    திருவிழாவில் பங்கேற்பதற்காக வருகை தரும் இளம்பெண்கள் கைகளில் பூத்தட்டுகளை ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வருவார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து கலந்துகொள்ள வருகை தரும் இளைஞர்கள் தங்கள் மனம் கவர்ந்த பெண்களை தேர்வு செய்து தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பார்கள்.

    அதன்பேரில் அவர்களும் அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்களை அழைத்து கோவில் வளாகத்திலேயே பேசி திருமணத்தை முடிவு செய்யும் பழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது. முனியாண்டி சுவாமியின் சன்னதியில் வைத்து நிச்சயிக்கப்படும் இந்த திருமணங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது என்றனர்.

    ×