இஞ்சிமேடு திருமணிச் சேறைவுடையார் சிவன் கோவிலில் பக்தர்கள் கிரிவலம்

வருகிற 16-ந்தேதி 108 பால்குடம் மற்றும் கூழ்வார்க்கும் திருவிழா வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது
இஞ்சிமேடு திருமணிச் சேறைவுடையார் சிவன் கோவிலில் பக்தர்கள் கிரிவலம்
Published on

சேத்துப்பட்டு:

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலை திரும ணிச் சேறைவுடையார் சிவன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவலிங்கம், திருமணி நாயகி தாயார், விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகர், அகத்தியர் ஆகிய மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் ஆனந்தன் ஐயர் தலைமையில் நடந்தது.

அதைத் தொடர்ந்து சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமிகள் தலைமையில் பக்தி பாடல்கள் பாடியபடி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

கோவில் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. இதில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் இருந்து பக் தர்கள் வந்து கிரிவலம் சென்றனர்.

கோவிலில் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆண்டு பெருவிழாவை யொட்டி 108 பால்குடம் மற்றும் கூழ்வார்க்கும் திருவிழா நடக்கிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com