search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர் கனவில் வந்த இடத்தில் எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை- மஞ்சள் பூசி பக்தர்கள் வழிபாடு
    X

    கல்லூரி மாணவர் கனவில் வந்த இடத்தில் எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை- மஞ்சள் பூசி பக்தர்கள் வழிபாடு

    • சென்னை கல்லூரி மாணவர் கனவில் வந்து கூறிய இடத்தில் எல்லை பிடாரி அம்மன் சிலை இருந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
    • பரவசம் அடைந்த பக்தர்கள் சிலைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, பூமாலை அணிந்து வழிபட்டனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள வட சிறுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலன். இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது கனவில் மஞ்சள் நிற உடை அணிந்த பெண் வந்து வடசிறுவலூர் பச்சை அம்மன் கோவில் எதிரே உள்ள குளக்கரையில் முட்புதரில் ஒரு வேப்பமரத்தின் பின்புறம் எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை இருப்பதாகவும், அதை கிராம மக்கள் வழிபட வேண்டும் என கூறியுள்ளார்.

    இதுகுறித்து வேலன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி உள்ளார். அதன் படி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அங்கு இரு நாகங்களை குடையாக பிடித்த படி எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை இருந்தது. இதனால் பரவசம் அடைந்த பக்தர்கள் அந்த சிலைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, பூமாலை அணிந்து வழிபட்டனர்.

    Next Story
    ×