என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuchanur Saneeswara Temple"

    • பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
    • பக்தர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில். சுயம்புவாக எழுந்தருளி மூலவர் நிலையில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் என்பதால் தமிழக அளவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் 6 கண்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    தற்போது கோவில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆடி மாத வழிபாடு வழக்கமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவிலின் முன்பு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலில் தரிசனம் செய்ய பாதை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை மனமுருக வழிபட்டு எள்தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் இன்று ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    ஆடி 18-ம் நாளன்று இங்குள்ள சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
    • தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் குடும்பத்தில் உள்ள சனி தோஷம் நீங்கவும், திருமணத் தடைகள் காரியத் தடைகள் விலகவும் இங்கு வந்து பரிகாரம் செய்து சனீஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர்.

     

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகின்ற 5 சனிக்கிழமைகளில் குச்சனூர் சனீஸ்வரர் பெருமான் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இன்று ஆடி 3-வது சனிக்கிழமை மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தங்கள் தோஷம் விலக அருகில் உள்ள சுரபி நதிக்கரையில் நீராடி காகத்திற்கு எள் சாதம் வைத்து நல்லெண்ணெய் மற்றும் எள் தீபங்கள் ஏற்றி காக வாகனம் வாங்கி தலையை சுற்றி வைத்து பரிகாரங்கள் செய்தனர்.

    ×