என் மலர்
நீங்கள் தேடியது "குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்"
- பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
- பக்தர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில். சுயம்புவாக எழுந்தருளி மூலவர் நிலையில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் என்பதால் தமிழக அளவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் 6 கண்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
தற்போது கோவில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆடி மாத வழிபாடு வழக்கமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவிலின் முன்பு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலில் தரிசனம் செய்ய பாதை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை மனமுருக வழிபட்டு எள்தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் இன்று ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
ஆடி 18-ம் நாளன்று இங்குள்ள சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் திருவிழா நாளை கொடி யேற்றத்துடன் தொடங்க உள்ளது.
- இதனை முன்னிட்டு கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார ஸ்தலமான இக்கோவிலில் ஆடிபெருந்திருவிழா சிறப்பாக கொண்டா ட ப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா நாளை கொடி யேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் வளா கத்தில் பக்தர்களு க்காக தடுப்பு வேலிகள் அமை க்கும் பணி நடந்தது. சனீஸ்வர பகவான் கோவில் ஆடி மாத சனி க்கிழ மைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வரும் பக்தர்கள் சுரபி நதியில் நீராடி காக்கைக்கு எள் சாதம் படைத்து நல்லெ ண்ணெய் விள க்கேற்றி கொடி மரத்திற்கு உப்பு, பொறி படைத்து வணங்கு வார்கள். மேலும் மூலஸ்தானத்தில் உள்ள சனி பகவானையும் வழிபாடு செய்வார்கள்.
ஆடிமாதம் 5 சனிக்கிழமை களிலும் ஆடிப்பெருந்திரு விழா கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் பக்தர்க ளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடை பெற்றது. பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு சுகாதாரம், அடிப்படை வசதிகளை நிைறவேற்றி தருவது குறித்து எடுத்துரைத்தனர்.






