search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடங்கள்"

    • ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
    • ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது.

     ஊட்டி

    ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரசபை தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் காந்திராஜன், துணைத் தலைவா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    ஜாா்ஜ் (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில், இருந்த கால்வாயை மறைத்து ஏற்கனவே ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இரு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தில் கால்வாயை மறைத்து கட்டிடங்கள் கட்டுவதற்கு எவ்வாறு நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியது?

    மேலும், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள உத்தரவு வழங்கிய போதிலும், பணி செய்வதற்கான ஆணைகள் வழங்கப்படாமல் உள்ளதால், நகரில் எந்த ஒரு வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். நகராட்சியே அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    துணைத் தலைவா் ரவிக்குமாா்:

    ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் 1,500 சதுர அடிக்குள் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஊட்டி நகராட்சியிலேயே அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேல் கட்டிடங்கள் கட்ட மற்ற துறைகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. ஆனால், ஊட்டி நகரில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    அதன்பின் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி முறையாக கிடைப்பதில்லை. எனவே 1,500 சதுரடிக்குள் கட்டிடங்கள் கட்ட நகராட்சியே அனுமதி அளிக்கும் முறையை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து கவுன்சிலா்களும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும், மாஸ்டா் பிளான் சட்டத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு எளிதாக அனுமதி கிடைக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

    முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட பட்பயா் நிலத்தை டைடல் பாா்க் அமைக்க மாவட்ட நிா்வாகத்துக்கு ஒப்படைக்க கூடாது. இந்த தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி நகராட்சி மாா்க்கெட் கட்டிடங்களை இடித்து கட்டும்போது, தற்போது அங்கு கடை வைத்துள்ளவா்களுக்கே மீண்டும் கடைகள் வழங்க வேண்டும்.

    ஆணையா் காந்திராஜன்: ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டின் ஒரு பகுதி ரூ.29 கோடியில் இடித்து கட்டப்படுகிறது. கீழ் தளத்தில் கடைகளும், மேல் தளத்தில் பாா்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

    தம்பி இஸ்மாயில் (திமுக): எனது வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய்களை தூா்வார வேண்டும். மழைக் காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மேலும், எனது வாா்டில் நாய்கள் மற்றும் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    அபுதாகீா் (மநேம): ஊட்டி நகராட்சிப் பணியாளா்களுக்கு காந்தல் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இவை மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் பணியாளா்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் அந்த குடியிருப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

    ரஜினி (காங்கிரஸ்): எனது வாா்டுக்கு உள்பட்ட அலங்காா் பகுதியில் மழை நீா் செல்லும் கால்வாய் மற்றும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு விவாதங்கள் நடந்தது. தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடிகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • தனியார் கட்டிட உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களில் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை தேசியக்கொடி ஏற்றிட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    3 நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்கொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

    அதேபோல் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒளிரும் தேசியக்கொடி அமைக்கப்படவுள்ளது. தனியார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னா தேசிய கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் முதல்-அமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
    • பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே மனக்குண்ணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.17.32 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். விழாவில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-தமிழகத்தின் கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் முதலமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.அந்த வகையில் பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவ -மாண வர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறுஅவர் பேசினார்.

    • கடைமடை பகுதி விவசாயிகள் சங்கம், பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரப்பட்டு குளத்திற்குள் குறுங்காடுகள் அமைக்கப்பட்டது.
    • கரையில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பெரியகுளத்தில் தண்ணீர் நிறைந்து கடல் போல் காட்சி அளித்தது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரிய குளம் கரை பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகி றது.பேராவூரணி என பெயர் வர காரணமாக அமைந்த பெரிய ஊரணியாக இருந்து தற்போது பெரியகுளம் என்றழைக்கப்படும் குளத்தின் கரை குப்பைமே டாக காட்சி அளிக்கிறது.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடை மடை பகுதி விவசாயிகள் சங்கம் (கைபா) பொதுமக்கள் பங்களிப்போடு தூர் வாரப்பட்டு குளத்திற்குள் குறுங்காடுகள் அமைக்க ப்பட்டது.மேலும் கரையில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். பெரியகுளத்தில் தண்ணீர் நிறைந்து கடல் போல் காட்சி அளித்தது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.தற்போது பேராவூரணியிலுருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள குளக்கரையில் தென்னை மர துண்டுகள், கட்டிடங்கள் இடிக்கப்பட்ட கழிவுகள், குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அதிகாலையில் அவ்வழியாக நடைபயிற்சி செல்வோர் அச்சத்துடன் கடக்க வேண்டியசூழல் உள்ளது. எனவே சம்பந்த ப்பட்ட துறையினர் உடனடியாக அப்பகுதியை சுத்தப்படுத்தி விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×