search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தியவர் கைது"

    • போலீசார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
    • 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாள வாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பொது மக்களிடம் குறைந்த விலை க்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி சென்று அருகாமையில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்கதை ஆகி வருகிறது.

    இதனைதடுக்க தாளவாடி வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி வருவாய் துறை அதிகாரிகள் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள ராமாபுரம் என்ற இடத்தில் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    போலீசார் அந்த மோட்டார் சைக்கிள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த அரிசியை கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தாளவாடி பகுதியை சேர்ந்த பாஷா பாய் (55) என தெரிய வந்தது. பின்னர் போலீசார் பாட்சா பாயை பிடித்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிம் ஒப்படைத்தனர்.

    • அதிகாலை 3 மணி அளவில் பிடித்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வாணியம்பாடி சப் கலெக்டர் பிரேமலதா இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

    அப்ெபாது ஆம்பூர் அருகே வீரக் கோவில் என்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் அரசு அனுமதி இன்றி பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    விசாரனையில் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் புதுமனை பகுதியை சேர்ந்த சரவணன் வயது (43) என்பது ெதரிந்தது.

    பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

    • அருப்புக்கோட்டையில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    அருப்புக்கோட்டை,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக ரேஷன் அரிசி கடத்துவதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கணேஷ் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசியை கடத்திய மதுரையை சேர்ந்த ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கடத்தல் ரேசன் அரிசி மூட்டை அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதாக கொண்டு செல்லப்பட்டது என கைதான ராமமூர்த்தி தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ×