search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
    X

    பறிமுதல் செய்த ரேசன் அரிசி மூடைகளையும், அதனை பிடித்த போலீஸ் சப்-இன்ஸ்ர்பெக்டர் சீனிவாசனையும் படத்தில் காணலாம்.

    ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

    • அருப்புக்கோட்டையில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    அருப்புக்கோட்டை,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக ரேஷன் அரிசி கடத்துவதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கணேஷ் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசியை கடத்திய மதுரையை சேர்ந்த ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கடத்தல் ரேசன் அரிசி மூட்டை அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதாக கொண்டு செல்லப்பட்டது என கைதான ராமமூர்த்தி தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×