search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கனா ரனாவத்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
    • இயக்குனர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பிறகு, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்திருந்தார்.

    இவர், இயக்குனர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். இதன்பிறகு, இந்தியில் உருவான தேஜஸ் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் துவாரகா கோவிலுக்கு சென்றிருந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கங்கனா அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்கனா ரனாவத், "கடவுள் கிருஷ்ணர் ஆசீர்வதித்தால், நான் போட்டியிடுவேன். பா.ஜ.க. அரசின் முற்சிகளால், இந்தியர்களாகிய நாம் 600 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றியை பார்க்க போகிறோம். உலகம் முழுக்க சனாதன தர்மத்தின் கொடியை பறக்க செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.
    • இவர் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான தலைவி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    கங்கனா

    தற்போது இவர் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார்.

    இந்நிலையில், கங்கனாவை நேரில் சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் என பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா தெரிவித்துள்ளார். அதாவது, நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்.


    நவுஷீன் ஷா

    அவர் எங்கள் நாட்டைப் பற்றியும் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை கூறுகிறார். மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்." என ஆதங்கமாக பேசியுள்ளார்.

    • பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத்.
    • இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார்.

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார். கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் வீர் தாசுடன் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது உதட்டு முத்த காட்சியில் கங்கனா, வீர் தாசை முத்தமிட்டபோது கடித்ததால் அவருக்கு ரத்தம் வந்ததாக ஒரு தகவல் வேகமாக பரவியது.



    மேலும் கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் ஹிருத்திக் ரோஷனுடன் டேட்டிங் செல்வதாக கங்கனா தெரிவித்தார். ஆனால் இதனை ஹிருத்திக் மறுத்தார். இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்று பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த விஷயங்கள் குறித்து கங்கனாவிடம் இது உண்மையா? என நிறைய ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா தனது சமூக வலைதளத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பிறகு பாவப்பட்ட வீர்தாசை நான் தாக்கினேனா? இது எப்போது நடந்தது? என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


    இது இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கங்கனா பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்பீர்கபூர்- ஆலியாபட்டை பற்றியும் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரன்பீர்- ஆலியா ஜோடி பிரமாண்டமாக ஊரை கூட்டி திருமணம் செய்தாலும் வீட்டில் வேறு வேறு மாடியில் தான் வசிக்கிறார்கள். ஆனால் வெளியுலகிற்கு சேர்ந்து வாழ்வது போல் காட்டிக்கொள்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சமீபத்தில் லண்டன் சென்ற ரன்பீர் மனைவி ஆலியா, மகளை தனியாக விட்டு விட்டு சென்றுள்ளார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படிதான் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கங்கனா ரனாவத் தற்போது சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளது.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான தலைவி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது எமர்ஜென்சி படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார்.


    கங்கனா ரனாவத்

    கங்கனா ரனாவத்

    இந்நிலையில் கங்கனா ரனாவத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்டிருப்பது, Hi friends… Bye friends என்று ஜாலியாக பதிவிட்டு ஒரு புகைப்படத்தை இணைத்துள்ளார். வித்யாசமாக இருக்கும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் படம்‘சந்திரமுகி -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.


    சந்திரமுகி 2

    சந்திரமுகி 2

    லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை 10 நாட்கள் மைசூரில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் அதன்பின்னர் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.
    • இவர் பாலிவுட்டில் இருந்து தான் வெளியேறுவதற்கான காரணத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.


    பிரியங்கா சோப்ரா

    ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகபடவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்" என்று கூறினார்.


    கங்கனா ரனாவத் - கரண் ஜோஹர்

    இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேறியதற்கு பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தான் காரணம் என நடிகை கங்கனா ரனாவத் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற கரண் ஜோஹர் நினைத்ததாகவும் பாலிவுட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகை கங்கனா ரனாவத் ’சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் இவரின் காட்சிகள் நிறைவுபெற்றதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கங்கனா ரனாவத்

    இவரின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி படக்குழுவினர் வழியனுப்பி வைத்துள்ளனர். தற்போது கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வீட்டின் வெளியே கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.


    கங்கனா ரனாவத் பகிர்ந்த வீடியோ

    அந்த அறிவிப்பு பலகையில், "வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். அதில் உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிறரை மிரட்டும் வகையில் இவ்வாறு அறிவிப்பு பலகை வைப்பது சரிதானா..? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • பி. வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி -2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
    • நடிகை கங்கனா ரனாவத் 'சந்திரமுகி 2' படத்தில் தனது காட்சிகளை முடித்துள்ளார்.

    சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.


    சந்திரமுகி -2

    லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் 'சந்திரமுகி 2' படத்தில் தனது கதாபாத்திரத்தை முடித்துள்ளதாக நேற்று பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    அதில், "சந்திரமுகி படத்தில் இன்று நான் எனது கதாபாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக உள்ளது. நான் ராகவா லாரன்ஸுடன் எப்போதும் புகைப்படம் எடுத்ததில்லை. ஏனென்றால் நாங்கள் எப்போதும் திரைப்பட உடையில் தான் இருப்போம். அதனால் இன்று காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே புகைப்படம் எடுக்க கோரினேன்.


    சந்திரமுகி -2

    லாரன்ஸ் மாஸ்டரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஏனெனில் அவர் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார், ஆனால் ஒரு நம்பமுடியாத உயிரோட்டமான, கனிவான மற்றும் அற்புதமான மனிதர். உங்களின் கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்கான அனைத்து முன் பரிசுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டிருந்தார்.


    சந்திரமுகி -2

    இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி அவரை படக்குழுவினர் வழியனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.


    • இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’.
    • இப்படத்தின்படப்பிடிப்பு தளத்தில் கங்கனா ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    சந்திரமுகி 2 படக்குழு

    சந்திரமுகி 2 படக்குழு


    'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.


    படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய கங்கனா
    படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய கங்கனா

    'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஹோலி பண்டிகையை படக்குழுவுடன் கலர் அடித்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சந்திரமுகி -2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.


    சந்திரமுகி 2

    தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    கங்கனா ரனாவத் பதிவு

    சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'சந்திரமுகி 2' படப்பிடிப்பிற்காக தயாராகும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இவர் 'ஐந்து வருடங்களில் 'சந்திரமுகி 2' எனது மூன்றாவது புராஜெக்ட்' என்று பதிவிட்டுள்ளார்.

    • பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'.
    • இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

     

    சந்திரமுகி 2

    சந்திரமுகி 2

    தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    கங்கனா ரனாவத்

    கங்கனா ரனாவத்

    இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'சந்திரமுகி 2'-ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    கங்கனா ரனாவத்தின் ‘தாகத்’ திரைப்படம் 8-வது நாளில், வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள 'தாகத்' திரைப்படம் கடந்த 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கங்கனா ரனாவத் ஆக்‌ஷன் நாயகியாக களமிறங்கி இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் 'தாகத்' திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் அதன் ஒட்டுமொத்த வசூல், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

    கங்கனா ரனாவத் - தாகத்
    கங்கனா ரனாவத் - தாகத்

    சுமார் 90 கோடி மதிப்பில் தயாரான இந்த திரைப்படம், வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் 'தாகத்' திரைப்படம் வெளியாகி 8-வது நாளான இன்று, வெறும் 4,420 ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் இன்று இந்த படத்திற்கு 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானதாகவும், பல திரையரங்குகளில் படத்தை தூக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் 'தாகத்' படக்குழு சோகத்தில் மூழ்கியுள்ளது.
    ×