என் மலர்
நீங்கள் தேடியது "p. vasu"
- பி. வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.

இந்நிலையில், சந்திரமுகி 2 பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பி. வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. தற்போது சந்திரமுகி பாகம் இரண்டின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவாஜி கணேசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை தற்போது லைகா நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் பி.வாசு, எம்.ஜி.ஆரை வைத்து அதிக பொருட் செலவில் தயாராகும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். #MGR #PVasu
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு ஒரு படமாகவும் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு அனிமேஷன் படமாக ஒரு படமும் உருவாகி வருகிறது. என் பேஸ் என்ற அதிநவீன தொழில் நுட்பம் மூலம் எம்.ஜி.ஆரை உயிரோடு திரையில் நடமாட வைக்கப்போகிறார்கள். சுமார் 172 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.
இந்த படத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி விமலாநாதன் இருவரும் படம் பற்றி கூறும்போது, ‘இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்ணிய அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது.
அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம். வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பதால் இத்திரைபடத்திற்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார். இந்த படத்துக்காக எம்.ஜி.ஆர். குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறுகிறது’ என்றனர்.






