search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திர கோளாறு"

    • விமானத்தில் செல்ல இருந்த 164 பயணிகளும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்தனர்.
    • டெல்லி செல்ல இருந்த மற்ற விமானங்களில் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டது.

    சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 6 மணியளவில் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 164 பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கும், பின்னர் காலை 9 மணிக்கும் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்திரகோளாறு சரிசெய்யப்படாதால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த 164 பயணிகளும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்தனர்.

    மேலும் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த மற்ற விமானங்களில் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டது.

    • விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.
    • உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6:55 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.

    விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன்பு விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்த போது அதில் கோளாறு இருப்பதை அறிந்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் எந்திரம் பழுது பார்க்கப்பட்டு இன்று காலை 8:10 மணிக்கு தாமத மாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரியான நேரத்தில், விமானி கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ×