search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்லியில் செல்ல இருந்த சென்னை விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
    X

    டெல்லியில் செல்ல இருந்த சென்னை விமானத்தில் திடீர் எந்திர கோளாறு

    • விமானத்தில் செல்ல இருந்த 164 பயணிகளும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்தனர்.
    • டெல்லி செல்ல இருந்த மற்ற விமானங்களில் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டது.

    சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 6 மணியளவில் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 164 பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கும், பின்னர் காலை 9 மணிக்கும் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்திரகோளாறு சரிசெய்யப்படாதால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த 164 பயணிகளும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்தனர்.

    மேலும் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த மற்ற விமானங்களில் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டது.

    Next Story
    ×