search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரங்கள்"

    • கையில் பெரிய அளவிலான பேனா படம் வரைந்திருந்த தெர்மாகோலுடன் மனு கொடுக்க வந்தனர்.
    • விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் தங்களது கையில் பெரிய அளவிலான பேனா படம் வரைந்திருந்த தெர்மாகோலுடன் வந்து மனு கொடுக்க வந்தனர்.

    அவர்கள் வைத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிவாரணமும் வழங்கவில்லை . இழப்பீம் வழங்கவில்லை. உடனடியாக பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 81 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்கு கட்டினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். டெல்டா மாவட்டங்களில் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். விலைவாசி ஏற்றம் உள்ள டி.ஏ.பி. ரூ.1400-ம், பொட்டாஷ் விலை ரூ.1900-ம், காம்ப்ளக்ஸ் விலை ரூ.1500 என உள்ளதை உடனே குறைக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய பம்பு செட்டுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை உடனே மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். 2022-23-க்கான சம்பா பருவத்திற்கு கூட்டுறவு கடன் உடனே வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கொடுத்தனர். தெர்மாகோல் பேனாவுடன் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாடித்தோட்ட பைகள், செடி வளர்ப்பதற்கான தொங்கும் தொட்டிகள், மண்புழு உரங்கள், கை தெளிப்பான்கள், கவாத்து கத்திரிக்கோல் மற்றும் குழித்தட்டுகளும் உள்ளன.
    • விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் தரமானதாகவும், குறைவான விலையிலும் இருப்பதனால் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறை சார்பில் தஞ்சாவூர் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது.

    தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் மரியரவிஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இங்கு தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குன்னூர் பழப்பதனிடும் நிலையத்தில் தயாரித்த ஜாம், மா ஊறுகாய்,மற்றும் கன்னியா குமாரியில் உள்ள தேனீக்கள் மகத்துவ மையத்தில் தயாரித்த தேன், பட்டை மற்றும் பிரியாணி இலையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.மேலும் மாடித்தோட்ட பைகள், செடி வளர்ப்பதற்கான தொங்கும் தொட்டிகள், மண்புழு உரங்கள், கை தெளிப்பான்கள், கவாத்து கத்திரிக்கோல், மற்றும் குழித்தட்டுகளும் உள்ளன.

    இங்கு விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் தரமானதாகவும், குறைவான விலையிலும் இருப்பதனால் பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தோட்ட க்கலை உதவி இயக்குநர்கள் முத்தமிழ்ச்செல்வி, கனிமொழி, தோட்டக்கலை அலுவலர்கள் சோபியா, கிருத்திகா, உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் வெங்கடாசலபதி, செந்தில்குமார், ராஜ்குமார் மற்றும் வேளாண் வணிகதுறை உதவி அலுவலர்கள் அமரேசன், மோனிஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • தனியார் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு அரசின் சான்று பெற்ற விதை நெல் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
    • 30 சதவீதம் பகுதி நெற்கதிர் வந்த நிலையில், மீதமுள்ள 70 சதவீதம் பகுதி விதை நெல் முளைப்பு திறன் இல்லாததால் பயிர் வீணாகியுள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வேளாண்துறை இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப அரசின் சான்று பெற்ற விதை நெல் அரசு மூலமாகவும், அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்னும் 5 அல்லது 6 வாரங்களில் அறுவடை பணிகள் நடை பெற உள்ளது.

    இந்நிலையில் வலங்கை மான் வட்டம் தென்கரை ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு அரசின் சான்று பெற்ற விதை நெல் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இத்தகைய தனியார் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்ட அரசு சான்று பெற்ற விதை நெல் ரகம் கோ.51 என்ற விதை நெல்லை, வெங்கடேசன்,சுகுமார், சீனிவாசன், குரு சீனிவாசன், கணேசன்,வீரமணிபோன்ற ஏராளமான விவசாயிகள் வாங்கி சுமார் நூற்றுக்க ணக்கான ஏக்கர் பரப்பளவில் குறுவை நடவு பணிகளை மேற்கொண்டனர்.

    இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் கோ.51 ரகம் பயிரிடப்பட்ட வயல்களில் 30 சதவீதம் பகுதி நெற்கதிர் வந்த நிலையில், மீதம் உள்ள 70 சதவீதம் பகுதி விதை நெல் முளைப்பு திறன் இல்லாததால் பயிர் வீணாகியுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் வேளாண்துறை கட்டுப்பா ட்டில் செயல்படும் விதை நெல்லை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனம்.

    அரசு சான்று பெற்ற விதை நெல்லின் தரமற்ற விதை நெல்லை கலப்படம் செய்தனரா?

    அல்லது குறுவை நெல்லுடன் சாம்பா, தாளடி போன்ற நெல்லை கலந்து விற்பனை செய்தனராா?

    என் பிரச்சினை எழுதுவதாகவும் இதற்கு வேளாண் துறை அதிகாரிகளே முழு பொறுப்பு என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    தென்கரை ஆலத்தூர் கிராமத்தில் நூற்றுக்க ணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள குறுவை விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    போலி கலப்பட விதை நெல்லால் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கினால் தான் விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அரசு போலி கலப்பட விதை நெல் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, கலப்பட விதை நெல்லால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி அதன் மூலம் அடுத்த கட்ட சம்பா, தாளடி பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள அரசு பேருதவியாக இருக்க வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

    • பயிருக்கு குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.
    • விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெற உதவிடும் வகையில் அவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் வேளாண்மை உதவி அலுவலர் கோவிந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உணவில் உப்பின் பயன்பாட்டை போன்றே நுண்ணூட்ட உரங்கள் தேவை. அதை சிறிதளவில் இட்டாலும் இதன் தேவை இன்றியமையாதது. பயிருக்கு குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.

    இரும்புச்சத்து பயிரின் பச்சை தன்மையை சீராக வைக்க உதவுகிறது. இதன் குறைப்பாட்டால் பயிர்கள் வெளிறி மஞ்சள் நிறம் அல்லது வெண்மை நிறத்துடன் காணப்படும். துத்தநாகச்சத்து கணு இடைப்பகுதி வளர்ச்சி, புரதங்களின் சேர்க்கையில் பங்காற்றி மொத்த மகசூலில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகிறது. இந்த சத்து குறைப்பாட்டால் பயிர்கள் வளர்ச்சி குன்றி குட்டையாகி மகசூல் பாதிக்கும். போரான் சத்து குறைப்பாட்டால் பூ உதிர்தல், காய், கனிகளின் அளவு சிறுத்து, ஒல்லியாகவும் ஒழுங்கற்ற அமைப்புடன் காணப்படும்.தாமிர சத்து பயிரின் இனப்பெருக்கத்தினை அதிகரித்து, அதிக மகசூல் பெற உதவுகின்றது. இந்த சத்து குறைப்பாட்டினால் பயிரில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. மாங்கனீசு சத்து பச்சையம் உருவாதல், ஒளிர்சேர்க்கை, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.

    இதன் குறைபாட்டால் இலை நரம்பிடை பகுதிகள் வெளிறி காணப்படும். பயிர்களில் எளிதில் நோய் ஏற்படும். இவ்வாறு பல்வேறு முக்கிய பணி களை செய்யும் இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவதன் மூலம் நமது பயிரின் மொத்த மகசூலில் 15-20 சதவீம் கூடுதலாக பெறலாம். குறைந்த அளவே தேவைப்படும் இந்த நுண்ணூட்ட உரங்கள் ஒவ்வொரு பயிருக்கும் தேவைப்படும் அளவு மாறும்.வேளாண்மை துறை நுண்ணூட்ட சத்து கலவை களாக, சிறு தானிய பயிர்களுக்கான கலவை, எண்ணை வித்து கலவை, தென்னை நுண்ணூட்ட கலவை என ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு சத்துக்களை தேவையான விகிதத்தில் கலந்து விவசாயிகள் வழங்கி வருகிறது. இதை பயிருக்கு ஏற்ப இடுவதற்கு எளிதாக ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ நுண்ணூட்ட கலவை பொட்டலங்களாக விநியோகம் செய்து வருகிறது.

    விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெற உதவிடும் வகையில் அவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது. நடப்பு பருவத்தில் பரமத்தி வட்டார விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற ஜி.எஸ்.டி நீங்கலாக 50 சதவீத மானிய விலையில் நுண்ணூட்ட உரங்களை பெற்று பயிருக்கு இடலாம். விவசாயிகள் சிட்டா நகல், ஆதார் எண்ணுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

    • உரங்கள் வழங்கும் பணிகளை இலக்கின்படி விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • உரங்கள் இருப்பு விவரம் மற்றும் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி உரங்கள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பகுதியில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட இலவச ரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    ஒரு ஏக்கருக்கு யூரியா 45 கிலோ டி.ஏ.பி. 50 கிலோ பொட்டாஷ் 25 கிலோ என ரூ.2465 மதிப்புள்ள ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்ப டுகிறது. குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானிய விலையில் இலவசமாக ரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வரும் பணிகளை சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உரங்கள் இருப்புப் பதிவேடு, உரங்கள் இருப்பு விவரம் மற்றும் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி உரங்கள் கையிருப்பில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரங்கள் வாங்க வந்த பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அருகில் உள்ள சோழபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்திலும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து இலவச ரசாயன உரங்கள் வழங்கும் பணிகளை இலக்கின்படி விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது தஞ்சை வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சை வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர், தஞ்சை வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பால சுப்ரமணியன், கும்பகோணம் வேளா ண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) தேவி கலாவதி ஆகியோர் இருந்தனர்.

    • உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும்
    • திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை காட்டுதோட்டத்தில் உள்ள மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் வரவேற்று பேசினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர். அப்போது திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை மீண்டும் அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

    ×