search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரங்கள்"

    • கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
    • அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    திருச்சுழி

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகள், கண் மாய்கள், குளம், குட்டை களில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

    திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது சுமார் 450-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிரிட்டுள்ள விவசா யிகள் உரமிடுவது, களை எடுப்பது போன்ற பணி களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் நாற்று நடும் பணிகளையும் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயி களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகள் மூலமாக உரங்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் அடங்கல் கொடுத்து உரங்களை வாங்க உள்ளதாகவும், அப்படி கொடுத்தும் உரங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் இதனால் உரம் வாங்க தனியார்கடைகளை நாடி செல்லும் நிலை ஏற்பட் டுள்ளதாகவும் விவசாயி கள் கூறுகின்றனர்.

    தனியார் உரக்கடைகள் யூரியா உரங்களை அதிக ளவில் இருப்பு வைத்துக் கொண்டு உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது போன்ற ேதாற்றத்தை ஏற்படுத்தி அதிக விலைக்கு உரங்களை விற்கின்றனர். 45 கிலோ எடை கொண்ட யூரியா உர மூடைகள் ரூ.330 முதல் ரூ.350 வரை யிலும் சுமார் 50 கிலோ எடையுள்ள டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங் கள் ரூ.800 முதல் அதிக பட்சமாக ரூ.1600 வரை யிலும் விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் இணை உரங்க ளையும் அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாகவும், இதனால் யூரியா உரம் வாங்கும் போது 5 மடங்கு அதிக விலை கொண்ட டி.ஏ.பி போன்ற இணை உரங்களையும் வாங்க வேண்டி உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தனியார் உரக்கடைகளில் வாங்கும் உரங்களுக்கு ரசீதுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என வும், கைரேகை மற்றும் ஆதார் பதிவுகளை அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படு வதாகவும் சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

    அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருவதாகவும், பறக்கும் படையினர் மேற்கொள்ளும் ஆய்வு பெயரளவிலேயே உள்ள தாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

    இந்த நிலையில் தீவிர மாக ஆய்வுகள் மேற்கொண்டு விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுத்து விவசாயி களுக்கு தடையின்றியும், சரியான விலையிலும் உரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
    • கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுவை பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.40 கோடி இலக்கு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    எனவே, கடன் தேவைப்படும் விவசாயிகள் உடன் சிட்டா அடங்கல் நகலுடன் தாங்கள் உறுப்பி னராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளிக்க வேண்டும்.

    பயிர்கடன் தனிநபர் ரூ.1.6 லட்சம் வரையில் நபர் ஜாமீன் பேரில் அதிகபட்சமாக கடன் பெறலாம். நகை அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். ஏக்கர் ஒன்றுக்கு பயிர்கடன் ரொக்கமாக ரூ.28 ஆயிரத்து 550, பொருள் பகுதியாக ரூ.7 ஆயிரத்து 550 ஆக மொத்தம் ரூ.36 ஆயிரத்து 100 வழங்கப்படும்.

    மேலும், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள், குறுவை தொகுப்புக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110-க்கு பங்கு தொகை மற்றும் நுழைவு க்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் நாகப்பட்டினம் மண்டல இணைப்பதிவாளர் 73387 21201 என்ற எண்ணிற்கு அல்லது நாகப்பட்டினம் சரக துணைப்பதிவாளர் 90879 46937 என்ற எண்ணிற்கோ அல்லது துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் 90800 15003 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன.
    • 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் குருவைப் பட்ட சாகுபடிக்காக மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன. பொட்டாஷ் 1080 மெட்ரிக் டன் உர மூட்டைகளும் , 253 மெட்ரிக் டன் கலப்பு உரங்களும் சரக்கு ெரயில் மூலம் வந்து இறக்கப்பட்டது. பின்னர் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

    • 13 ஆயிரத்து 463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
    • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 26-ந் தேதி வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட நீடித்த நிலையான மேலாண்மை இயக்கம் கூட்டுப் பண்ணையத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டங்களின் மூலம் 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூ.359.16 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 13463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    மேலும் கூட்டுறவு துறை மூலம் 2023-24-ம் ஆண்டுக்கு ரூ.456.65 கோடி கடன் வழங்கி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஏப்ரல் ஒன்று முதல் மே 26 வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு தேவையான 6512.07 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மண்டல இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    • தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.
    • குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து தயாராகலாம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வேளாண்மை அலுவலகத்தில் 44 டன் ஆடுதுறை 53 நெல் விதை இருப்பு உள்ளது என்றும், விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் வாங்கி பயன்படுத்தலாம் என வேளாண்மை துறை அலுவலர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தலைஞாயிறு பகுதியில் 4 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி நடைபெறும்.

    ஆனால், இந்த ஆண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடிக்காக தலைஞாயிறு, நீர்முளை, கொத்தங்குடி, பனங்காடி ஆகிய 4 வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆடுதுறை 53 நெல் விதை 44 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சாகுபடிக்கு தேவையான சிங் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட நுண்ணூட்ட சத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது விதை மற்றும் உரங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும், குறுவை சாகுபடிக்கு தற்போது கோடை உழவு செய்ய ஏற்ற நேரமாகும்.

    எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து குறுவை சாகுபடிக்கு தயாராகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 331 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் உரம் தருமபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது.
    • விவசாய தேவைக்கு பயன்படுத்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா கூறியுள்ளார்.

    தருமபுரி, 

    தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளுக்கு வினியோகம் செய்ய டி.ஏ.பி உரம் 1027 மெட்ரிக் டன்னும் 331 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் உரம் தருமபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது.

    தருமபுரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 76 மெட்ரிக் டன் டி.ஏ.பியும், காம்ப்ளக்ஸ் 20 மெட்ரிக் டன்னும், கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 70 மெட்ரிக் டன் டி.ஏ.பியும் 25 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் உரங்களும்,

    திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 60 மெட்ரிக்டன் டி.ஏ.பி உரமும், தருமபுரி மாவட்ட இருப்பு கிடங்கில் 310 டன் டி.ஏ.பி உரமும் காம்ளக்ஸ் உரம் 130 மெட்ரிக் டன்னும், கிருஷ்ணகிரி மாவட்ட இருப்பு கிடங்கில் 511 மெட்ரிக் டன் டி.ஏ.பி உரங்களும் 136 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டன.

    லாரிகளில் மூலம் பிரித்து அனுப்பும் பணியினை தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு தாம்சன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது இப்கோ தருமபுரி மாவட்ட விற்பனை அலுவலர் அப்துல்லா உடனிருந்தார். மேலும் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 2923 மெட்ரிக் டன்னும் டி.ஏ.பி 3043 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 811 மெட்ரிக் டன்னும் காம்ளக்ஸ் 4668 மெட்ரிக் டன்ணும், சூப்பர் பாஸ்பேட் 395 மெட்ரிக் டன்னும் மொத்தம் 11840 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட் டுள்ளது.

    விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு மானிய உரங்களை பெற்று தங்களின் விவசாய தேவைக்கு பயன்படுத்த வேண்டுமாய் தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    • தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.
    • வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் நடப்பு சம்பா, தாளடி நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது.

    இதன் அறிகுறிகள் என்ன வென்றால் நெற்கதிரில் உள்ள இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.

    தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

    இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்.

    இதனை கட்டுப்படுத்தும் முறைகளாவது நெல்வயல்களில் தேவைக்கு அதிகமாக தொழு உரங்கள் இடுவதை தவிர்க்கவும். வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் இனக்களை நீக்க வேண்டும்.

    இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்பஎண்ணை ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

    மேலும் பூச்சிச்கொல்லியை கட்டுப்படுத்த அசிபேப் அசார்டியாக்டின் குளோரோடேரேனிலிபுருள் புளுபென்டிமைட் தையமீத்தாக்கம் மருந்துகளை தெளித்து இலை சுருட்டு புழுவை கட்டுபடுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிஎஸ்பி உரத்தினை கரைத்து தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
    • விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் வரப்புகளில் பெருமளவில் உளுந்து சாகுபடி உள்ளது.

    இவ்வாண்டு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக வடகிழக்கு பருவமழை கிடைப்பதால் வரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து நன்கு செழித்து வளர்ந்து உள்ளது. தற்போது பூக்கும் தருணத்தில் உள்ளது.

    ஆடுதுறை 5 வம்பன் 8 முதலிய இடங்களில் பயிரிடப்பட்டுள்ளன வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதால் கூடுதல் வருமானமும் இயற்கை முறையில் நெல் வயலில் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடிகிறது.

    2 சதவீதம் டிஏபி கரைசல் 20 லிட்டர் தண்ணீரில் நாலு கிலோ டிஎஸ்பி உரத்தினை கரைத்து 24 மணி நேரம் ஊற வைத்து பிறகு தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி எடுத்து அத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் கைதெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

    பயிர் வகை நுண்ணுட்டம் இரண்டு கிலோ 100 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் பஞ்சகவ்யா பசு மாட்டின் சாணம் கோமியம் பால்,நெய் தயிர் முதலியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் நொதி கரைசல் பஞ்சகாவியம் ஆகும் .

    இப் பஞ்சகாவியத்தினை ஒரு டேங்க்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். உயிர் உரங்கள் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மூன்றையும் தலா 250 மில்லி கலந்து இந்த கரைசலை டேங்குக்கு 100 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

    உளுந்து சாகுபடிகள் மூலம் கூடுதல் வருமானம் புரதச்சத்து உள்ள உணவு கிடைப்பதுடன் கால்நடைகளுக்கு உளுந்து தட்டை தீவனமாக பயன்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் யூரியா 1991 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 841 மெட்ரிக் டன், பொட்டாஷ் 574 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,028 மெட்ரிக் டன் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உரங்கள் அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் எந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் உரங்கள் வாங்கும் போது உரிய ரசீது பெற வேண்டும்.

    மேலும் இருப்பு விபரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். உரங்களுடன் நேனோ யூரியா போன்ற இணை பொருட்களை விவசாயி களுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக்கூடாது.

    உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபடக்கூடாது. இதனை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரசாயன உரங்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.
    • ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருக்கருக்காவூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீபகாலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முந்தைய காலங்களில் கால்நடை கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிகளவில் விவசாயம் செய்து வந்தனர். அதற்காகவே விவசாயிகள் அதிகளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர். சமீபகாலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிகளவில் கிடைப்பதில்லை.

    அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது.

    ரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு அதில் விளைவிக்ககூடிய தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உள்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    சமீப காலமாக ரசாயன உரங்கள் தட்டுப்பாடு, மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.

    வயல்களில் ஆடுகள், மாடுகள் உள்ள கால்நடைகளை அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணம், புளுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த இயற்கை உரமாக கிடைக்கிறது.

    இதற்காக இராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும் இயற்கை உரத்திற்காக கொண்டு வரப்பட்டு ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கிடை அமைக்கும் பணிகளில் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து ஏலாகுறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் முடிந்தவுடன் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஆடு, மாடுகளை சேகரித்து மேய்ச்சலுக்காக கொண்டு வந்து சுமார் 5 மாதம் வரை இங்கேயே கிடை அமைத்து தங்கி மேய்ச்சலில் ஈடுபடுத்துவோம்.

    ஒரு இரவுக்கு கிடை வைக்க 2 ஆயிரம் பணம் மற்றும் 3 படி அரிசியை கூலியாக பெறுவோம் என்றார்.

    • நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.
    • விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனி யார் உர நிறுவன நிலை யங்களில் யூரியா 2 ஆயிரத்து 558 மெட்ரிக் டன், டிஏபி1,243 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,113 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 679 மெட்ரிக் டன்மற்றும் காம்ப்ளக்ஸ் 3,424 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.

    இதனை வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) ஆய்வு செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களு க்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டு றவு விற்பனை நிலை யங்களில் அரசு நிர்ண யித்த விலையில் மட்டும் விற்பனை விவசாயி களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனுமதிக்கப்பட்ட அளவு உரங்கள் மட்டுமே வழங்கபடும்.
    • விதிகளை மீறினால் உரங்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள உரக்கடை உரிமையாளர்கள் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் கி.லீலாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனையாளர் தங்களின் விற்பனைக்கான புதிய உரிமம் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட வேணடும். மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்கும் போது விவசாயிகளிடம் ஆதார் எண் கேட்டு வாங்க வேண்டும். பிறகு தான் உரம் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை விற்க வேண்டும். ஒரே நபருக்கு அதிக உரங்களை விற்பனை செய்ய கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு உரங்கள் மட்டுமே வழங்கபடும்.

    மேலும் உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை செய்பவர்கள் கட்டாயம் விற்பனை ரசீது வழங்க வேண்டும். மேலும் விவசாயிகள் தவறாது விற்பனை ரசீதுகளை கேட்டு பெறவும். உரக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் அனுமதிக்கப்பட்ட உரம், பூச்சிமருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. தங்களின் விற்பனை உரிமம், விலை விவரங்களை அனைவரும் காணும்படி வைக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை செய்பவர்கள் அனுமதி பெறாத நிறுவனங்களில் உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது.

    மொத்த விற்பனையாளர் உரங்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்யவோ மாற்றம் செய்யவோ கூடாது. சில்லரை விற்பனையாளர்களுக்கு உரங்களை அளிக்கும் போது முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்ப வேண்டும். மீறினால் அத்தகைய உரங்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு தேவையான பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் பரிந்துரைக்கபட்ட உரம் பூச்சிமருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

    உரக்கடை உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலை மற்றும் விவசாயி அல்லாத நபர்களுக்கு உரங்களை விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டால் உரகட்டுபாட்டு ஆணை1985-ன்படி விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×