search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் கடற்படை கப்பல்கள்"

    ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடைமுறையில் இருந்த ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். #UkraineMartialLaw #Crimea
    கீவ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்தது.
     
    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து அசோவ் கடற்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.


    இதையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரஷ்ய எல்லையில்  உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டு, கடந்த மாதம் 28-ம் தேதி ராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒரு மாத காலம் இந்த சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நாட்டின் எல்லை பிராந்தியங்களில் அமலில் உள்ள ராணுவச் சட்டம் இன்றுடன் (புதன்) முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் பெட்ரோ போரோஷென்கோ நேற்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றியபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பான அனைத்து கூறுகளையும் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். #UkraineMartialLaw #Crimea #UkrainePresident
    உக்ரைன் நாட்டின் பிரச்சனையை தீர்ப்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #Ukraineconflict #UkraineWar #Putin
    பியுனஸ் அய்ரெஸ்:

    உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை சமீபத்தில் கிரிமியா அருகே ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

    இந்த பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு சமீபத்தில் தடை விதித்துள்ளது. உக்ரைனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக இதேபோன்ற தடையை விதிக்கும் எண்ணம் ஏதுமில்லை என ரஷியா தெரிவித்தது.


    இந்நிலையில், உக்ரைன் நாட்டின் பிரச்சனையை தீர்ப்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் அய்ரெஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதின், 'ரஷியா-உக்ரைன் இடையில் நீண்டுவரும் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதில் அந்நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை. எனவே, தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை இருநாடுகளுக்கும் இடையிலான போர் தொடரும்’ என்று தெரிவித்தார்.  #Ukraineconflict #UkraineWar #Putin
    பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு இன்று தடை விதித்துள்ளது. #Russianmen #Russianmenbarred #Ukraineconflict
    கீய்வ்:

    உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை சமீபத்தில் கிரிமியா அருகே ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.


    இந்நிலையில், இந்த பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு இன்று தடை விதித்துள்ளது. உக்ரைனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக இதேபோன்ற தடையை விதிக்கும் எண்ணம் ஏதுமில்லை என ரஷியா தெரிவித்துள்ளது. #Russianmen #Russianmenbarred #Ukraineconflict 
    உக்ரைன் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு பிரச்சனையை மையப்படுத்தி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். #G20Summit #Trump #Putin #TrumpPutin #Ukrainecrisis
    பியூனஸ் அயர்ஸ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.
     
    உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது.


     இந்த பரபரப்பான சூழ்நிலையில், அர்ஜென்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதி என ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை அறிவித்திருந்தது. வாஷிங்டனில் இருந்து அர்ஜென்டினாவுக்கு புறப்படும்போது டிரம்ப்பும் நேற்று இதை உறுதிப்படுத்தி இருந்தார்.

    ஆனால், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது ரத்து செய்து விட்டார்.

    ரஷியாவால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல்களும், மாலுமிகளும் இன்னும் உக்ரைனுக்கு திரும்பிவராத நிலையில் புதினுடனான சந்திப்பை ரத்து செய்ய தீர்மானித்துள்ளேன். இந்த பிரச்சனை தீர்ந்த பின்னர் கூடிய விரைவில் அர்த்தமுள்ள ஒரு சந்திப்பை நான் எதிர்பார்க்கிறேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #G20Summit #Trump #Putin #TrumpPutin #Ukrainecrisis
    ரஷியாவுடன் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிபர் புரோசென்கோ தெரிவித்துள்ளார். #UkrainePresident #PetroPoroshenko
    மாஸ்கோ:

    கடந்த காலத்தில் ரஷியாவை ஒட்டி இருந்த பல நாடுகள் சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தன.

    பின்னர் அந்த நாடுகள் ரஷியாவுடன் இருந்து பிரிந்து சென்று விட்டன. அதில், முக்கிய நாடு உக்ரைன்.

    பிரிந்து சென்ற பிறகு இருநாடுகளும் பகை நாடுகளாக மாறி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷியா வலுக்கட்டாயமாக கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது.

    அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு மிகவும் அதிகரித்தது.

    இந்த நிலையில் ரஷிய கடல் பகுதியில் சென்ற உக்ரைனின் 4 கப்பல்களை ரஷியா சிறை பிடித்துள்ளது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே, உக்ரைன் தனது படைகளை எல்லையில் குவித்து வருகிறது.

    பதிலுக்கு ரஷியாவும் எல்லையில் அதிக ஆயுதங்களை குவித்து வருகிறது. போர் பதட்டம் நிலவுவதால் உக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக உக்ரைன் அதிபர் புரோசென்கோ கூறும் போது, உக்ரைன் கடுமையான மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

    தற்போது நடக்கும் நிகழ்வுகள் விளையாட்டுத்தனமான வி‌ஷயம் அல்ல. ரஷியா தாக்குதலுக்கு தயாராகி உள்ளது.

    எனவே, ரஷியாவுடன் நாங்கள் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

    தங்களுக்கு உதவும் வகையில் நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டு கப்பல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் இதுபற்றி கூறும் போது, உக்ரைனுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உக்ரைனில் நடக்கும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக அந்த நாட்டு அதிபர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், போர் நடக்க போகிறது என்று கூறியும் நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார். #UkrainePresident #PetroPoroshenko
    கிரிமியா அருகே உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. #Crimea #RussiaSeizesShips
    கீவ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள், அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே இணைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அதிபர் புதின் பிறப்பித்த ஆணை செல்லாது என்று உக்ரைனும் அறிவித்தது. அதன்பின்னர் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்துள்ளது. 


    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறந்து கண்காணித்தபடி உள்ளது.

    உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. #Crimea #RussiaSeizesShips
    ×