search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்கள் கற்பழிப்பு"

    • சம்பவத்தில் ஈடுபட்ட சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    • பழனி பைபாஸ் பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே 19, 17 வயதுடைய 2 சகோதரிகளை கடந்த வாரம் மோட்டார் பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. தாமரைக்குளம் பகுதியில் சிறுமிகளின் காதலர்கள் முன்பே அவர்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    2 சிறுமிகளையும் 4 பேர் கற்பழித்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு நாங்கள் அழைக்கும் போதெல்லாம் எங்கள் இடத்துக்கு வர வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் எனவும் மிரட்டினர்.

    திண்டுக்கல் நகரையே பெரும் பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    தலைமறைவான ரவுடி பிரசன்னகுமாரை பிடிக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உதயகுமார் ஆலோசனையின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

    பழனி பைபாஸ் பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பொன்மாந்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் பிரசன்ன குமார் மீது 5 கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் உள்ளது. இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் தேர்தல் சமயத்தில் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும், சம்பவத்தன்று தனது நண்பர்கள் உதவி என கேட்டதால் அவர்களுக்கு தான் பதுங்கி இருக்கும் இடத்தை காட்டியதாகவும் கூறினார்.

    பின்னர் நண்பர்கள் 3 பேரும் சிறுமிகளை பலாத்காரம் செய்ததை பார்த்து தனக்கும் ஆசை வந்ததால் அதில் இறங்கியதாக கூறினார். கொலை, அடிதடி வழக்குகளில் ஈடுபட்டாலும் தனக்கு பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்பதால் விருப்பம் இல்லாமல் இறங்கியதாகவும் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.
    • கைதான 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். தாய் இல்லாத சூழலில் தந்தை மற்றும் தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இதில் 19 வயது சிறுமிக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் 19 மற்றும் 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சகோதரிகள் 2 பேரும் சாலையின் ஓரம் நின்றிருந்தனர். காதலர்கள் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சிறுமிகளை மிரட்டினர்.

    இதை பார்த்ததும் காதலர்கள் ஓடி வரவே அவர்களை கத்தி முனையில் மிரட்டி தங்களுடன் பைக்கில் வருமாறு கூறினர். பின்னர் அவர்கள் 4 பேரையும் தாமரைக்குளம் என்ற இடத்திற்கு இரவில் தங்க வைத்தனர். பின்னர் தங்கள் கூட்டாளியான மேலும் ஒருவரை அங்கு வரவழைத்தனர்.

    அங்கு காதலர்கள் 2 பேரையும் கட்டி போட்டுவிட்டு 2 சகோதரிகளையும் 4 வாலிபர்கள் மாறிமாறி பலாத்காரம் செய்தனர். இதனை அவர்கள் வீடியோவாகவும் எடுத்துக் கொண்டனர். நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் நீங்கள் எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

    அதிகாலை வரை தங்கள் காம இச்சையை நிறைவேற்றிய 4 வாலிபர்களும் பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பின் சிறுமிகள் இருவரும் எழுந்து கட்டப்பட்டிருந்த தங்கள் காதலர்களை விடுவித்தனர். பின்னர் இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தனர்.


                                                                            கைதானவர்கள்

     

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை பலாத்காரம் செய்த மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார் (வயது 21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான சுள்ளான் என்ற பிரசன்னகுமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பிரசன்னகுமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரசன்னகுமார் எப்போதும் செல்போன் பயன்படுத்தமாட்டாராம். தனது நெருக்கமான நண்பர்கள் சிலரின் செல்போன் எண்களை மனப்பாடமாக வைத்திருப்பாராம். அவசர தேவைக்கு மட்டும் யாரிடமாவது செல்போன் வாங்கி பேசுவார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். வருமானத்திற்காக பல திருட்டு, வழிப்பறியிலும் ஈடுபட்டு வருவது இவர்களின் தொழிலாக உள்ளது.

    கைதான 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளை தவிர மற்ற வீடியோக்களும் இருந்ததால் இவர்கள் இதேபோல வேறு யாரிடமாவது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பெரும்பாலும் வடமாநிலங்களில் மட்டுமே இதுபோல கூட்டு பலாத்காரம், காதலர்களை கட்டிப் போட்டு 4 பேர் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது அதேபோல ஒரு சம்பவம் திண்டுக்கல் அருகே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • கைதானவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் அனைவரும் கடந்த 30-ந்தேதி இடையகோட்டையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பினர்.

    அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையோரம் நின்று கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் (21), முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (22) ஆகிய 3 பேரும் அந்த சிறுமிகளிடம் எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள் என கேட்டுள்ளனர். ஓட்டலில் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து விட்டு வெளியே வந்த காதலர்கள் அவர்களிடம் தங்களுடன் வந்ததாக கூறியுள்ளனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் சுள்ளான் என்ற பிரசன்னகுமார் (25) என்பவருக்கு போன் செய்து 2 சிறுமிகள் சிக்கியுள்ளனர். அவர்களை அழைத்து வரவா? என கேட்டுள்ளனர். அவரும் சிறுமிகளை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காதலர்கள் 2 பேரையும் ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு, சிறுமிகள் 2 பேரையும் மற்றொரு பைக்கில் ஏற்றிக் கொண்டு தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர்.

    அங்கு வந்தவுடன் காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டனர். அந்த இடத்துக்கு பிரசன்னகுமாரும் வந்து விடவே 4 வாலிபர்களும் சேர்ந்து 2 சிறுமிகளை மாறி மாறி கற்பழித்தனர். இரவு முழுவதும் 4 வாலிபர்களும் தங்கள் இச்சையை தீர்த்துக் கொண்டு அதிகாலை நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர் அவர்கள் 4 பேரும் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர். பின்னர் இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய பிரசன்ன குமாரை தேடி வருகின்றனர். பிரசன்ன குமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் தாலுகா, மேற்கு தாடிக்கொம்பு, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • பொருளாதார பிரச்சினை குறித்து அறிந்த திருப்பதியை சேர்ந்த பிரியா என்ற பெண் அவர்களை நாடினார்.
    • சாமியார் ஒருவர் பெண்களை அமர வைத்து பூஜை செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் ஏழ்மையால் அவதி அடைந்து வந்தார். மேலும் தனது 2 மகள்களுக்கு வயதாகியும் திருமணம் ஆகாததால் வேதனை அடைந்தார்.

    இவர்களது பொருளாதார பிரச்சினை குறித்து அறிந்த திருப்பதியை சேர்ந்த பிரியா என்ற பெண் அவர்களை நாடினார். அமானுஷ்ய பூஜை செய்தால் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்ந்து விடும் என கூறினார்.

    இதனை நம்பி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மகள்களுடன் கடப்பாவிற்கு சென்றனர். புரோட்டூரில் இருந்த கும்பல் ஒன்று நள்ளிரவில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்தனர்.

    அப்போது சாமியார் ஒருவர் பெண்களை அமர வைத்து பூஜை செய்தார். அந்த நேரத்தில் இளம்பெண்களை மயக்கி கும்பல் ஒன்று பலாத்காரம் செய்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பி வந்த இளம்பெண்கள், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    விபச்சார கும்பல் அமிர்தா நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அனைவரையும் சுற்றி வளைத்து பிரித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பொருளாதாரம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் அப்பாவி பெண்களை பூஜைக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் தள்ளியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் திருப்பதியை சேர்ந்த பிரியா, நந்தியாலா ரவிக்குமார், கர்னூல் காந்தம்மா, கம்பன்கிரி ராமுடு, அனந்தபூர் வெங்கடேஷ், நாகராஜ் மற்றொரு ராமுடு ஆகியோரை கைது செய்தனர்.

    இதேபோல் எத்தனை பெண்களை பலாத்காரம் செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறையின் ஜன்னல் வழியாக செல்போனில் மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
    • இளம்பெண்கள் 2 பேரும் இதுதொடர்பாக எச்.ஏ.எல். போலீசில் புகார் அளித்தனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு நிசர்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரகுராம்(வயது 42). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் இளம்பெண்கள் 2 பேர் கணக்காளர் மற்றும் மேலாளராக பணி செய்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் ஓட்டலின் தரைத்தளத்தில் உள்ள அறையில் தங்கி வேலை செய்கின்றனர். இந்த நிலையில் இளம்பெண்கள் 2 பேரும் ஓட்டலில் உள்ள குளியல் அறையில் தனித்தனியே குளித்தனர்.

    அப்போது குளியல் அறையின் ஜன்னல் வழியாக செல்போனில் மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண், உடனடியாக வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது தான் ஓட்டல் உரிமையாளர் ரகுராம் செல்போனில் வீடியோ எடுத்தது தெரிந்தது. அதை அழிக்குமாறு அந்த பெண் ரகுராமிடம் கூறினார். அப்போது அவர் வீடியோவை அழிக்க வேண்டும் என்றால், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு கூறி உள்ளார்.

    இதையடுத்து அவர் ஓட்டலில் வேலை செய்த 2 பெண்களையும் மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண்கள் 2 பேரும் இதுதொடர்பாக எச்.ஏ.எல். போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரகுராமை கைது செய்தனர்.

    • பெண் ஒருவர் 3 இளம்பெண்களிடம் அதிக அளவில் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தார்.
    • போலி சாமியார் தங்களை ஏமாற்றியதால் விரக்தி அடைந்த இளம்பெண்கள் சாலையோரம் நின்று அழுது கொண்டிருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பொன்னே கல்லுவை சேர்ந்தவர் 35 வயது போலி சாமியார். இளம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை செய்தால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என கூறி வந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.

    இதனை கண்ட சிலக்கலூருபேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் போலி சாமியாரை தொடர்பு கொண்டார். அப்போது போலி சாமியார் நிர்வாண பூஜைக்காக பெண்களை அழைத்து வந்தால் அதிக அளவில் பணம் கொடுப்பதாக தெரிவித்தார்.

    அந்த பெண் கர்னூல் மாவட்டம், ஆத்மகூரு பகுதியை சேர்ந்த 3 இளம்பெண்களிடம் அதிக அளவில் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தார்.

    இதையடுத்து போலி சாமியார் 3 இளம்பெண்களையும் விஜயவாடா, ஓங்கோல், குண்டூர், பொன்னே கல்லு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு நிர்வான பூஜை செய்து பலாத்காரம் செய்தார்.

    பின்னர் போலி சாமியார் இளம்பெண்களை காரில் ஏற்றி கொண்டு குண்டூர் அருகே உள்ள அமராவதி சாலையில் இறக்கி விட்டு தப்பி சென்றார்.

    போலி சாமியார் தங்களை ஏமாற்றியதால் விரக்தி அடைந்த இளம்பெண்கள் சாலையோரம் நின்று அழுது கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு நல்ல பாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து போலி சாமியார், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் மற்றும் 3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    ×