என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுமிகள் கற்பழிப்பு"
- முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
- இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2007-ல் இறந்தார்.
கணவர் இறந்த பிறகு தனது தாய் மாமன் சதீஷ்குமார் (வயது 43) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தனது 2 மகள்களையும் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் சேர்த்து அங்கேயே தங்க வைத்தார்.
முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
2-வது திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார் சில மாதங்களுக்கு பிறகு தனக்கு குழந்தை பெற்று தர வேண்டும். இல்லையென்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வேன் என அடம்பிடித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதிலாக என்னுடைய மகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள் என கூறினார்.
இதையடுத்து விசாகப்பட்டினத்திற்கு வந்த இளம்பெண் அங்கு 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மூத்த மகளை 2-வது கணவரிடம் ஒப்படைத்தார். சிறுமியின் கடும் எதிர்ப்பையும் மீறி சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார்.
இதனால் சிறுமி கர்ப்பமானார். சிறுமி கர்ப்பமான விஷயம் வெளியே தெரிந்தால் அவதூறாக பேசுவார்கள் என கூறி டாக்டரிடம் அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்.
ஆனால் மீண்டும் சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது சதீஷ்குமார் தனக்கு பெண் குழந்தை தேவையில்லை. ஆண் குழந்தை தான் வேண்டும் என அடம் பிடித்தார்.
இதையடுத்து விசாகப்பட்டினம் சென்ற இளம்பெண் தனது 2-வது மகளை அழைத்து வந்தார். அவரையும் சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் கருவிலேயே இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இறந்த நிலையில் பிறந்த குழந்தையை தூக்கிச் சென்று கால்வாயில் வீசி விட்டனர்.
இதனால் இளம்பெண்ணிற்கும் சதீஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனது 2 மகள்களையும் சதீஷ்குமாரிடம் விட்டு விட்டு இளம்பெண் விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் சதீஷ்குமார் மற்றும் சிறுமிகளை அழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார். இது குறித்த தகவல் அறிந்த இளம்பெண் ஏலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் அவருக்கு துணையாக இருந்த சிறுமியின் தாய் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
சிறுவயதிலேயே குழந்தை பெற்ற சிறுமிகள் தவித்து வருகின்றனர்.
- சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து விட்டு தலைமறைவானார்.
- வாலிபர் பெற்றோர் இல்லாத சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுடன் சமூக வலைதளங்களில் பழகி, பின்பு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கஜக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு, மலப்புரம் அருகே உள்ள பெரிந்தால் மன்னா வெங்காடு பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது20) என்ற வாலிபருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் மூலம் பேசி வந்த இருவரும் நேரிலும் சந்தித்து பழகி வந்துள்ளனர். அப்போது வாலிபர் கோகுல் காதலிப்பதாக கூறி சிறுமியை பல இடங்களுக்கு காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். அவ்வாறு அழைத்துச் செல்லும் போது, சிறுமியை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து விட்டு தலைமறைவானார். இது குறித்து கஜக்கூட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கருநாக பள்ளி பகுதியில் அவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை பல முறை பலாத்காரம் செய்ததும், நகைகளை பறித்ததும் உறுதியானது. மேலும் அவர் இது போன்று பல சிறுமிகளை காதலிப்பதாக கூறி தனது வலையில் வீழ்த்தி உள்ளார்.
அவர் பெற்றோர் இல்லாத சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுடன் சமூக வலைதளங்களில் பழகி, பின்பு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கோகுலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
- ஆசிரியர் விசாரித்த போது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.
விழுப்புரம்:
செல்போன் பயன்பாட்டுக்கு வந்த பின் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறவும் ஒரு காரணமாக உள்ளது.
தற்போது விழுப்புரத்தில் செல்போன் மூலம் ஆபாச படம் வீடியோவை காண்பித்து 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
விழுப்புரம் தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு கிராம பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வடமாநில குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அச்சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர் விசாரித்த போது அச்சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை குழந்தைகள் நல அலுவலருக்கு ஆசிரியர் தகவல் தெரிவித்தார். குழந்தைகள் நல அலுவலர் அச்சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு சிறுமியை பரிசோதித்ததில் அவர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிய வந்தது.
இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் கடந்த 28-ந்தேதி விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய 4 சிறுவர்கள் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
4 சிறுவர்களும் தங்கள் செல்போனில் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை காண்பித்து வட மாநில சிறுமி உளபட 5 சிறுமிகளுக்கு பாலியல் கொடுத்ததும் அந்த சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 4 சிறுவர்கள் மீதும் போக்சோவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் 4 பேரும் இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் கிக்கிரவாண்டி அருகே உள்ள கப்பிலியாம் புலியூர் பகுதியில் ஒதுக்குப்புறமாக காதலனுடன் பேசிக் கொண்டிருந்த பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்