search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வட மாநில சிறுமி உள்பட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர்கள்
    X

    வட மாநில சிறுமி உள்பட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர்கள்

    • கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
    • ஆசிரியர் விசாரித்த போது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    செல்போன் பயன்பாட்டுக்கு வந்த பின் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறவும் ஒரு காரணமாக உள்ளது.

    தற்போது விழுப்புரத்தில் செல்போன் மூலம் ஆபாச படம் வீடியோவை காண்பித்து 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

    விழுப்புரம் தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு கிராம பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வடமாநில குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் அச்சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர் விசாரித்த போது அச்சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை குழந்தைகள் நல அலுவலருக்கு ஆசிரியர் தகவல் தெரிவித்தார். குழந்தைகள் நல அலுவலர் அச்சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு சிறுமியை பரிசோதித்ததில் அவர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிய வந்தது.

    இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் கடந்த 28-ந்தேதி விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய 4 சிறுவர்கள் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    4 சிறுவர்களும் தங்கள் செல்போனில் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை காண்பித்து வட மாநில சிறுமி உளபட 5 சிறுமிகளுக்கு பாலியல் கொடுத்ததும் அந்த சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து 4 சிறுவர்கள் மீதும் போக்சோவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் 4 பேரும் இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் கிக்கிரவாண்டி அருகே உள்ள கப்பிலியாம் புலியூர் பகுதியில் ஒதுக்குப்புறமாக காதலனுடன் பேசிக் கொண்டிருந்த பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×