search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறையருள்"

    • மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று வணங்குவது சிறப்பானது.
    • “கனகதாராவைப் பாடுவோருக்கு தனது அருள் கிட்டும்” என்பது திருமகள் வாக்கு.

    மகாலட்சுமியை எவ்வாறு வணங்கினால் நிறைய செல்வம் கிடைக்கும்?

    மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று விரதமிருந்து வணங்குவது சிறப்பானது.

    அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் மிகவும் விசேஷம். அதனால் எல்லாவிதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    அதைத்தவிர நாம் பணத்தை எப்போது பயன்படுத்தினாலும் அப்போதெல்லாம் "ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம" என்று சொல்லிவிட்டுப்பயன்படுத்தினால் நம்மிடம் பணம் நிலைத்து நிற்கும்.

    சிறு வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர்.

    துறவு நெறிக்கு ஏற்றவாறு தினமும் இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    அப்படி யாசகம் வாங்குவதற்காக ஒரு வீட்டுக்குச் சென்றார். அவர் போன வீடு ஏழை பிராமணரான சோமதேவருடையது.

    அச்சமயம், சோமதேவர் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருந்தார். அவருடைய மனைவியான தர்மசீலை மட்டும் தான் வீட்டில் இருந்தாள்.

    அந்த வீட்டின்முன் நின்ற சங்கரர் "பவதி பிசோந்தேஷி!" என்றார்.

    வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்றுபதில் கூறு தர்மசீலைக்கு வருத்தமாக இருந்தது.

    வேறு வழியின்றி "கொடுப்பதற்கு ஒன்றுமில்லை" என்று மனம் வருந்திக்கூறினாள்.

    அதைக்கேட்ட சங்கரர் "அன்னமிட வழியில்லாவிட்டாலும் பரவாயில்லை. உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்"! என்றார்.

    வீட்டில் அங்குமிங்கும் தேடிப்பார்த்தாள் தர்மசீலை.

    எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் இருந்தது.

    அதைக் கொண்டுபோய் ஆதிசங்கரருக்கு வழங்கினாள்.

    "அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்" என்றார் சங்கரர்.

    இந்த ஏழ்மை நிலையிலும் அடுத்தவருக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதே என்று வியந்த அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.

    அவ்வளவுத்தான்.

    வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையெனக் கொட்டின.

    "கனகதாராவைப் பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்" என்பது திருமகள் வாக்கு

    • சிவ வழிபாட்டின் மூலம் புகழ் அடைந்தவர்கள்தான் நாயன்மார்கள்.
    • அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள்.

    அறுபத்து மூன்று நாயன்மார்கள்

    சிவ வழிபாட்டின் மூலம் புகழ் அடைந்தவர்கள்தான் நாயன்மார்கள்.

    இவர்கள் 63 பேர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    சைவத் திருமுறைகள் என அழைக் கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

    முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும்.

    நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே.

    பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள்.

    இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

    அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். கி.பி. மூன்று நான்காம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர்.

    தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.

    மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார்.

    அவர் மனைவி மங்கையர்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண் ஆவார்.

    திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயன்மார் ஆவார்.

    இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.

    63 நாயன்மார்கள் விவரம் வருமாறு

    1.அதிபத்தர்

    2.அப்பூதியடிகள்

    3.அமர்நீதியார்

    4.அரிவட்டாயர்

    5.ஆனாயர்

    6.இசைஞானியர்

    7.இடங்கழியார்

    8.இயற்பகையார்

    9.இளையான்குடி மாறன்

    10.உருத்திரபசுபதியார்

    11.எறிபத்தர்

    12.ஏயர்கோன்கலிக்காமர்

    13.ஏனாதி நாதர்

    14.ஐயடிகள் காடவர் கோன்

    15.கணநாதர்

    16.கணம் புல்லர்

    17.கண்ணப்பர்

    18.கலிக்கம்பர்

    19.கலியர்

    20.கழறிற்றறிவார்

    21.கழட்சிங்கர்

    22.காரியார்

    23.குங்கிலியக்கலயர்

    24.காரைக்கால்

    25.குலச்சிறையார்

    26.கூற்றுவார்

    27.கோச்செங்கட்சோழர்

    28.கோட்புலியார்

    29.சடையனார்

    30.சண்டேசுரர்

    31.சத்தியார்

    32.சாக்கியர்

    33.சிறுப்புலியார்

    34.சிறுத்தொண்டர்

    35.சுந்தரர்

    36.செருத்துணையார்

    37.சோமாசிமாறர்

    38.தண்டியடிகள்

    39.திருக்குறிப்புத்தொண்டர்

    40.திருஞானசம்பந்தர்

    41.திருநாவுக்கரசர்

    42.திருநாளைபோவார்

    43.திருநீலகண்டர்

    44.திருநீலகண்டயாழ்பாணர்

    45.திருநீலநக்கர்

    46.திருமூலர்

    47.நமிநந்தியடிகள்

    48.நரசிங்கமுனையாரையர்

    49.நின்றசீர்நெடுமாறர்

    50.நேசர்

    51.புகழ்ச்சோழர்

    52.புகழ்த்துனையார்

    53.பூசலார்

    54.பெருமிழவககுரும்பர்

    55.மங்கயற்கரசியார்

    56.மானக்கஞ்சாறர்

    57.முருகர்

    58.முனையடவார்

    59.மூர்க்கர்

    60.மூர்த்தியார்

    61.மெய்ப்பொருளார்

    62.வாயிலார்

    63.விறண்மிண்டர்

    ×