search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறையன்பு"

    • குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் பட்டியலின கிராம ஊராட்சி தலைவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்.
    • கிராம சபை கூட்டங்கள் முடிந்ததும், பிரச்சினையின்றி முடிந்ததா என உறுதி செய்ய வேண்டும்.

    குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது உள்ளிட்ட 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும், இது குறித்து எடுக்கப்பட்ட அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

    அதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருள் தொடர்பாக பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குரிய 15 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை களையுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    மேலும், நடந்து முடிந்த 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில், மேற்குறித்த பிரச்சினைகளுக்குரிய 15 இனங்கள் தொடர்பாக, அவரவர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கைகள் பெறப்பட்டு, அரசால் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி மேற்கூறிய 15 இனங்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து எவ்வித பிரச்சினைகளும் இனி வருங்காலங்களில் ஏற்படாத வாறு உரிய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தக்க ஆலோசனை/ பயிற்சி அளித்து எவ்வித புகார்களுமின்றி எதிர்வரும் 26-ந்தேதி அன்று அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், எதிர்வரும் 26-ந்தேதி அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும் பார்வை ஒன்றில் காணும் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு மேற்கூறிய 15 இனங்கள் தொடர்பாக எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களை தொடர்ந்து கண்ணியத்துடன் நடத்தும் விதமாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கைகள் எடுத்து உறுதி செய்யுமாறும் இது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்கு உடனுக்குடன் அனுப்புவதோடு எதிர்வரும் குடியரசு தினம் அன்று கிராம சபை முடிந்தவுடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி நடைபெற்றுள்ளதா என்பதனை உறுதி செய்து விரிவான அறிக்கை அனுப்பவும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருவான்மியூரில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்த போது ஆகாயத்தாமரையை கூட இன்னும் அகற்றாமல், தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் இருந்ததை பார்த்து அவர் மனவேதனை அடைந்தார்.
    • இதனால் அங்கிருந்த அதிகாரிகளை தலைமைச் செயலாளர் கடிந்து கொண்டார்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1000 கிலோமீட்டருக்கு மேல் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறையின் சார்பில் நடைபெற்று வரும் இந்த பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதல் இடமாக திருவான்மியூரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்த நிலையில், அடுத்ததாக பள்ளிக்கரணை பகுதியில் கால்வாய் இணைப்புக் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சீர்படுத்துவது, மதகுகளை ஒழுங்குபடுத்துவது, ஆகாயத்தாமரை அகற்றுவது போன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    திருவான்மியூரில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்த போது ஆகாயத்தாமரையை கூட இன்னும் அகற்றாமல், தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் இருந்ததை பார்த்து அவர் மனவேதனை அடைந்தார்.

    இதனால் அங்கிருந்த அதிகாரிகளை தலைமைச் செயலாளர் கடிந்து கொண்டார்.

    'நாம் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யவில்லை என்றால் நிச்சயமாக நம்மால் பருவமழையை எதிர்கொள்ள முடியாது.

    எனக்கு தெரியாதா? உங்கள் துறையை பற்றி.... நீங்கள் மனசு வைக்கவில்லை. நீங்கள் மனசு வைத்திருந்தால் இந்த பணி எப்போதோ முடிந்திருக்கும். இது ஒரே நாளில் பந்தல் போடும் துறையல்ல, வேலையும் அல்ல' என கூறினார்.

    மீண்டும் 7-ந் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அப்போது பணிகள் சரி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கண்டிப்புடன் கூறினார்.

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 11 இடங்களில் நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலர் இறையன்புடன் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்.

    • சுதந்திர தினத்தன்று ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பிரச்சனை நடைபெறாத வகையில் நடவடிக்கை.
    • கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்றுவதற்கு அவரது சாதியை காரணமாக காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்த ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.  


    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

    முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு தலைமைச் செயலாளர் இன்று நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களோடு நேரடியாக கலந்துரையாடினார்.

    தொடர்ந்து பல்வேறு துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 75-வது சுதந்திர தின விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றுவது குறித்தும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    சுதந்திர தினத்தன்று இவ்வூராட்சியில் எவ்வித பிரச்சனைகளும் நடைபெறாத வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை தலைமைச் செயலாளர் உறுதி செய்து, தேசிய கொடிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து, ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், தலைமைச் செயலாளர் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடிக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுதந்திர தின விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைப்பது மரபு.
    • தேசியக் கொடி ஏற்றிவைப்பது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். 

    ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. 

    இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவுக்கூறு-17ன்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு அதன் எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 

    1989-ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு3(1)(m)ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலகப் பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய

    குற்றமாகும்.

    மேலும் மேற்சொன்ன சட்டத்தின் பிரிவு 3(1)(m)ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் மேற்சொன்ன வகுப்பினரை வேண்டுமென்றே அவமதித்தால் அல்லது பொதுமக்கள் பார்வையில் எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அச்சுறுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். 

    இதனைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

    அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய

    பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

    மேலும், இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், போதுமான காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.

    இந்தப் புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் (Help line) / ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம்.

    இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையினை அரசுக்கு 14.08.2022 மாலைக்குள் வந்து சேருமாறும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும் அது குறித்த அறிக்கையை 17.08.2022க்குள் அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பல இடங்களில் பதவி உயர்வு வழங்க கோப்புகள் தயாரிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்கு தகவல்கள் வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
    • ஒவ்வொரு ஆண்டும் காலதாமதம் இன்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்று அல்லது சில நாட்களுக்கு முன்பாக பதவி உயர்வு கிடைப்பதற்காக செயற்கையாக அந்த அலுவலகங்களில் காலிப்பணியிடம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

    இதன் மூலம் அந்த ஊழியருக்கு பதவி உயர்வு வருவதற்கு முன்பே பதவி உயர்வு கிடைத்து விடுகிறது.

    இவ்வாறு ஓய்வு பெறும் சமயத்தில் அவர் பதவி உயர்வு பெற்றால் முழு சேவை செய்யாமலேயே அதற்கான முழு சம்பளம் உள்ளிட்ட பணப்பயனை பெற்று விடுகிறார்.

    இவ்வாறு பல இடங்களில் பதவி உயர்வு வழங்க கோப்புகள் தயாரிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்கு தகவல்கள் வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    எனவே ஒவ்வொரு ஆண்டும் காலதாமதம் இன்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

    இதன் மூலம் தகுதி உள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    அரசு ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவோ அல்லது ஓய்வு பெறும் நாளன்று பதவி உயர்வுக்கான அவரது முறை வருவதற்கு முன்பே பதவி உயர்வு வழங்கும் வகையில் செயற்கையாக காலி பணியிடங்களை ஏற்படுத்த கூடாது.

    அதாவது விடுமுறையில் சென்று காலிப்பணியிடத்தை உருவாக்குவது, தற்காலிக பதவி உயர்வு வழங்குவது போன்று செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட அறிவுறுத்தல்களை அனைத்து நியமன அலுவலர்களும் தவறாமல் கடை பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை.
    • கோவை, மதுரை மற்றும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலக செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறை செயலாளர் அவுசாஃப் சயீத், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்துப் பேசினார்.

    பாஸ்போர்ட் மற்றும் குடியேற்ற சேவைகள், தமிழக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வெளிநாட்டு ஆட்சேர்ப்பில் சட்டவிரோத ஏஜெண்ட்களை தடுப்பது, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம், அரபு நாடுகளிலிருந்து வரும் அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அப்போது, விவாதிக்கப்பட்டது.

    மேலும் பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்திய தூதரகங்கள், குடியேற்றப் பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை முறைப்படுத்துவதற்கான ஆன்லைன் நடைமுறையான அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவுசாஃப் சயீத் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பின் போது வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு கூடுதல் உதவி வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. பின்னர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை டாக்டர் அவுசாஃப் சயீத் பார்வையிட்டதுடன், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    ×