என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாதியை காட்டி அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்- ஊராட்சி மன்ற தலைவரை தேசியக் கொடி ஏற்ற வைத்தார் தலைமைச் செயலாளர் இறையன்பு
- சுதந்திர தினத்தன்று ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பிரச்சனை நடைபெறாத வகையில் நடவடிக்கை.
- கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்றுவதற்கு அவரது சாதியை காரணமாக காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்த ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு தலைமைச் செயலாளர் இன்று நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களோடு நேரடியாக கலந்துரையாடினார்.
தொடர்ந்து பல்வேறு துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 75-வது சுதந்திர தின விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றுவது குறித்தும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சுதந்திர தினத்தன்று இவ்வூராட்சியில் எவ்வித பிரச்சனைகளும் நடைபெறாத வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை தலைமைச் செயலாளர் உறுதி செய்து, தேசிய கொடிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், தலைமைச் செயலாளர் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடிக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்