search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதய செயலிழப்பு"

    • சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்.
    • இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.

    சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையை உள்ளிழுத்த பிறகு, இதய அமைப்பு உடனடியாக சில மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதய துடிப்பில் வேறுபாடு, ரத்த அழுத்தம் சீரற்றத்தன்மை, தமனி சுருக்கம் என இதய செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் அத்தகைய மாற்றங்கள் குறித்து பார்ப்போம்.

    இதயத் துடிப்பு

    புகையிலையில் இருக்கும் முதன்மையான போதைப்பொருளான நிகோடின், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோனான அட்ரினலின் செயல்பாட்டை தூண்டுவிடும். அதனால் புகைபிடித்த சில நொடிகளுக்குள் இதயத்துடிப்பு உடனடியாக அதிகரிக்க தொடங்கிவிடும்.

    ரத்த அழுத்தம்

    நிகோடின் ரத்த நாளங்களை சுருங்கச் செய்யக்கூடியது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். இதனால் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

    ஆக்சிஜன் குறையும்

    சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இது ரத்த ஓட்டத்தில் குறுக்கிட்டு அதில் கடத்தப்படும் ஆக்சிஜன் அளவை குறைக்கும். இதய தசை உள்பட செல்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை குறைப்பதற்கும் வழிவகுத்துவிடும்.

    ரத்த உறைவு

    புகைபிடிக்கும் பழக்கத்தை தொடரும்போது தமனிகளில் அடைப்பு உருவாவதை ஊக்குவிக்கும். இதனால் ரத்த உறைவு பிரச்சினை ஏற்படும். இதயம் அல்லது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். அதன் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும்.

    இதய செயலிழப்பு

    புகைப்பழக்கத்தை இடைவிடாமல் தொடர்ந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் தேவையை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். ரத்த விநியோகத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கும் வழிவகுக்கலாம். இந்த ஏற்றத்தாழ்வுகள் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.

    • வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலம் தான் வெளியேற்றப்படுகிறது.
    • பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான்.

    உடம்பில் மருந்துகளின் பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகம் திகழ்கிறது. ஏனெனில், பெரும்பாலான மருந்துகள் மற்றும் அதன் வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலமாக தான் வெளியேற்றப்படுகிறது.

    அப்போது அதுசிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மருத்துவமனையில் சேர்க்கப் படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில் 20 சதவீதத்தினருக்கு மருந்துகளின் பக்க விளைவே காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 60 வயதை கடந்தவர்கள், ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் செப்சிஸ் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மருந்துகளின் பக்கவிளைவுகளினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

    பொதுவாக மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அந்த மருந்தை உட்கொள்வதை நிறுத்திய பின்னர் மீண்டும் சிறுநீரக செயல்பாடு பழைய நிலைக்கு திரும்பும். ஆகையால் நீங்கள் எந்த ஒரு நோய்க்கும் மருந்தை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் மருந்து மற்றும் அளவுகளை பின்பற்றினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது.

    ×