search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடி"

    • மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.
    • மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மின் வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    மின் கசிவு தடுப்பான் மூலம் மின் விபத்தை தடுக்கலாம். ஸ்டே கம்பிகளை மின் கம்பங்களில் கட்டக்கூடாது. குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் எர்த் பைப் அமைக்க வேண்டும்.

    மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது. குளியல் அறை, கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் சுவிட்ஜ் அமைக்கக்கூடாது.

    மின் கம்பங்களில் அருகே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. அறுந்து போகும் மின் கம்பிகள் தெரிந்தால் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவியுங்கள்.

    மின் கம்பங்கள் மீது வளர்ந்திருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மின்வாரிய அலுவலர்கள் மூலமும் அகற்றலாம். இடி,மின்னலின் போது வெட்டவெளியில் நிற்க கூடாது.

    மின்சாரம் தொடர்பாக மின்னகம் எண்: 9498794987, வாட்ஸ் ஆப் எண்: 94458 51912 என்ற எண்ணுக்கு புகாராகவும், புகைப்படமாகவும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது.
    • ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக ரித்து வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் மாலை லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இந்த திடீர் மாலையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது. பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் நகராட்சி அலுவலகம் செல்லும் எதிரே உள்ள மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் மோகன் ராஜ், விஜய் ஆனந்த் மற்றும் பணியாளர்கள் உடனே சம்பவத்திற்கு வந்து மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    இதன் பிறகு போக்குவரத்து சீரானது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 67 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதைபோல் கவுந்தப்பாடி, அம்மா பேட்டை, வரட்டுப்பள்ளம், சென்னிமலை பகுதியில் சாரல் மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானி-67, கவுந்த–ப்பாடி-18.40, அம்மா–பேட்டை-11.60, வரட்டு–பள்ளம்-7, குண்டேரி–பள்ளம்-6.20, சென்னி–மலை-3.

    • ஈரோடு மாவட்டத்தில் இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
    • அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நடந்த சில நாட்களாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் காலை முழுவதும் வெயில் வாட்டு வகித்தது. இரவு 7 மணி முதல் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை பெய்யத் தொடங்கியது.

    மாநகர் பகுதியில் இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொடுமுடி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, கொடிவேரி, தாளவாடி, சென்னிமலை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    அம்மாபேட்டை-90, கொடுமுடி-57, கவுந்த ப்பாடி-22, மொடக்குறிச்சி, வரட்டுபள்ளம்-21, ஈரோடு, பவானி-15, கோபி-9.4, குண்டேரிபள்ளம்-7.6, பெருந்துறை-7, கொடி வேரி-6.2, தாளவாடி-6, சென்னிமலை-4, பவானிசாகர்-3.2, சத்தியமங்கலம்-3.

    • கடலூர் மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • நேற்று 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து காண்கின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்று மாறுபடுவதால் பலத்த இடியுடன் கூடிய மழை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம் லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை காரணமாக இரவு மின்தடை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிகாலை 4 மணி அளவில் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் மேலும் மின்சாரத்தில் ஊழியர்கள் விடிய விடிய மின் இணைப்பு தருவதற்கு பணிகளை துரிதமாக மேற்கொண்டனர்.

    மேலும் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே பணிகள் பாதிப்பதோடு நெற்பயிர்கள் அழுகி வீணாகும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். மேலும் சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் இருந்து வந்த நிலையில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து காண்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு-கடலூர் - 45.9, ஆட்சியர் அலுவலகம் - 45.8,புவனகிரி - 42.0,காட்டுமன்னா ர்கோயில்- 38.2, லால்பேட்டை - 37.0, காட்டுமயிலூர் - 27.0, ஸ்ரீமுஷ்ணம் - 19.2, வேப்பூர் - 16.0, சிதம்பரம் - 13.2, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 12.5,அண்ணாமலைநகர் - 9.6, சேத்தியாத்தோப்பு - 5.8, விருத்தாசலம் - 5.0, பரங்கிப்பேட்டை - 4.2, 15. குறிஞ்சிப்பாடி - 4.0 கொத்தவாச்சேரி - 4.0 வானமாதேவி - 3.0 பண்ருட்டி - 1.2 மொத்தம் - 333.60 மழையளவு பதிவாகி உள்ளது

    சேலம், ஏற்காட்டில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக சேலத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்த மழை தொடர்ந்து இரவிலும் மழை தூறிய படியே இருந்தது. இதனால் சேலத்தில் இரவு முழுவதும் குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம் மாநகரில் அதிக பட்சமாக 15.4 மி.மீ. மழை பெய்துள்ளது . ஏற்காடு 4, ஆத்தூர் 3, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 23.4 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிட தக்கது. 

    பரமத்தி அருகே இடி தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே பிள்ளை களத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45), விவசாயி.

    இவரது தோட்டத்தில் தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி தென்னை மரத்தில் விழுந்ததால் தென்னை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

    ×